தமிழ்க் காதல்!

அசைவளி கொணர்ந்த அதிரல் நறுமணம்
எழிலி கண்டுவிரிந்த மஞ்ஞை தோகை
பெரும்பெயல் பொழிந்து குளிர்ந்த மாடம்
இவற்றினும் மேலாக உள்ளம் உகளத்
தமிழே நீ வேண்டும் என்பதே என் நசை!

இக்கவிதையில் உள்ள சில சொற்களின் அர்த்தங்கள்:
எழிலி - மேகம்
மஞ்ஞை - மயில்
பெரும்பெயல் - பெருமழை
உகள - துள்ள
நசை - விருப்பம் 

6 கருத்துகள்:

  1. அற்புதம் கிரேஸ்!!.. உங்கள் தமிழ் ஆளுமையை காட்டும் மற்றும் ஒரு பாடல்...'அசைவளி','அதிரல்' என்பதும் எனக்கு புதிய வார்த்தையே :-)

    பதிலளிநீக்கு
  2. அன்பின் கிரேஸ்

    அருமையான் கவிதை - இலக்கியத்தில் மட்டுமே பயன்படுத்தும் சொற்கள் இக்கவிதையில் இயல்பாகப் பயன் படுத்தியது பாராட்டுக்குரியது. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் கிரேஸ்

    கவிதை அருமை - இலக்கியத்தின் இயல்பான சொற்களைப் பயன்படுத்தியமை நன்று. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. நல்ல வேலை சொற்களின் அர்த்தங்களை கொடுத்தீங்க, இல்லைனா திரு திருனு முழிச்சிசிகிட்டு இருந்திருப்பேன் ! படிக்கிற காலத்தில ஒழுங்கா படிச்சாதானே :)

    அப்புறம் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு.சூர்யப்ரகாஷ்!

      ஹாஹா பள்ளியில் இந்தச் சொற்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்..இப்பொழுது வாசித்து அறிந்ததே!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...