தந்தையர் நாள் வாழ்த்து


 தந்தையாகிச் சிந்தை நெகிழ்ந்தாலும்
தன்னுடலில் தாய்போல் உணராமல்
புரிந்தும் புரியாமலும்
பரிவும் பரிதவிப்புமாய் பொறுப்பினை மனம்சுமந்து

குழந்தை துள்ளுவதாய்த் தாய் சொல்ல
துள்ளி வந்து தாய்வயிறு தொடுவதற்குள்
குழந்தை புரண்டுபடுத்து துயில் தொடரும்
ஏமாற்றமும் ஏக்கமும் மகிழ்வில் மறைத்து
ஏங்கி தாங்கிக் காத்திருந்து

மென்பூவாய் பிஞ்சு கைவர
மென்மை கையில் திரட்டி
மனம்தாங்கியச் செல்வத்தை ஏந்தி
அன்பூறி அகம் நிறையக் கண்டு

தோள் தாங்கி கையில் தாங்கி
வாழ்வெலாம் உள்ளத்தில் தாங்கி
பிள்ளையே வாழ்வென கடமையாற்றி
அரணாய் அரவணைக்கும் அப்பாக்கள் போற்றி !

தந்தையர் அனைவருக்கும் தந்தையர் நாள் வாழ்த்துகள்!







16 கருத்துகள்:

  1. இன்று நிறை மற்றும் மகி கிப்ட் தயார் செய்து தந்தனர்

    இப்போ இந்தப் பதிவு

    மகிழ்வு

    தொடர்க

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    உலகத்தில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கு இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதை

    வாழ்த்துகள்

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான கவிதை. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...