Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் - நூலறிமுகம்

       வேலூரில் வாழும் அத்தை வீட்டில் தங்கி மேல்நிலைப் பள்ளியிலும் பின்னர் கல்லூரியிலும் படிக்கும் திட்டத்தில் சென்னையிலிருந்து வேலூர் செல்கிறான் கிச்சா. ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதே அவன் நோக்கம். அதனால் அக்கௌன்ட்டன்சி பாடத்திற்கு தனிப்பயிற்சி எடுத்துக்கொள்ள ஏற்பாடு. வாத்தியார் வீட்டைத் தேடி செல்லும் அவன் தெருமாறிச் சென்று உமாவைச் சந்திக்கிறான். இச்சந்திப்பு கிச்சா மற்றும் உமாவின்  வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவந்தது என்பதை அவர்கள் குடும்பப் பின்னணியோடு இணைத்து தெளிந்த நீரோட்டம் போலச் சீராகச் சொல்கிறது Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் என்கிற நாவல்.

வேதராஜ் தாத்தா


கரும்பாறையினைக் கல்லினால் உராய்ந்ததைப் போல வானில் ஒரு ஒளிக்கீற்று. மனதில் ஒன்று, இரண்டு, மூன்று, நா.. எண்ணுவதற்குள் ஒலித்தது இடி. மூன்று மைல் தொலைவில் மையம் கொண்டிருத்த புயலினால் ஏதோ மரமுதிர்த்த இலைகள் திசை அறியாமல் என் வண்டியின் முன் கண்ணாடியில் தஞ்சம் புகவந்தன. ஆனால் எனக்குச் சாலை காட்டத் துடித்துகொண்டிருந்த முன்துடைப்பான் இலைகளை நொடியில் தள்ளிவிட்டது.

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...