கேட்கக் காதுள்ளவன்

Image: Thanks Internet

பூனை மிதித்து யானை மரித்ததாம்
பார்த்தவுடன் பகிர்ந்தேன்
பரவியது பகிரப்பட்டது பரவியது
யானைக்கெல்லாம் கோபம்
பூனை மேல்

யானையை விரும்பும் யாவர்க்கும் சினம்
பூனை மேல்
விதை விருட்சமானது
சிட்டுக்குருவிக்கு மட்டும் சிந்தனை
பூனை மிதித்து யானை?!?
குருவியைக் கேட்பாரில்லை
ஆனால் குருவி படம்போட்ட...!
 முகம் பார்த்துப் பேசுவாரில்லை
ஆனால் முகமென்று பேர்கொண்ட ...!

நான் என்ன புதிதாய்ச்  சொல்ல,
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
கேட்கக் காதுள்ளவன் கேட்கட்டும்


"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு" திருக்குறள் 423

எதை யார் சொன்னாலும், பகிர்ந்தாலும், எங்கு படித்தாலும் கேட்டாலும் நாமே மெய்ப்பொருள் காண்போம்! திருக்குறள் என்று சொல்லி எண்ணும் கொடுத்துவிட்டேன். தேடித் படித்து உணர்ந்து தெரிந்துகொள்வீர்!

32 கருத்துகள்:

  1. எதை யார் சொன்னாலும், பகிர்ந்தாலும்.... மெய்ப்பொருள் காண்போம்.

    நல்ல சிந்தனை.

    பாராட்டுகள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவுக்கு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா
      இடைவெளிக்குப் பிறகு தானே நானே எழுதுகிறேன் அண்ணா

      நீக்கு
  2. மெய்பொருள் காண்பதற்கு அறிவு வேணுமே? அது இல்லாததால்தான் இவ்வளவு பிரச்சனைகளும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கிறவங்க பயன்படுத்தனும்னு சொல்லிட்டே இருக்கவேண்டியதுதான் சகோ

      நீக்கு
  3. நல்லதொரு எண்ணம்
    மெல்ல நாமுணர வைத்தீர்கள்

    பதிலளிநீக்கு
  4. கண்டது கேட்டது இதன்பின் நன்றின்பால் துய்ப்பதுவும் அறிவே!

    பதிலளிநீக்கு
  5. நன்று. வாட்ஸாப் மருத்துவ, தத்துவ பகிர்வுகளை நான் இதே போல நம்புவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம். ஆமாம், நல்லது சகோ. நானும் அனைத்தையும் நம்புவதில்லை.

      நீக்கு
  6. கிரேஸ் உங்கள் புளொக் இன்றுதான் நீண்ட காலத்தின் பின் தூசு தட்டப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி.. என்ன இருக்கு என வந்தால் ஹையோ ஆனை பூனை:) அதிலும் வென்றது பூஸார்ர்ர்:)) என் மகிழ்ச்சிக்கு அழவே இல்லை:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிராஆஆ :) நல்லா இருக்கீங்களா? ஆமா ரொம்ப நாளா தூசி தட்ட மட்டுமே வந்தது போல இருக்கின்றது..இனி அப்டி இருக்கக் கூடாது.
      ஹாஹா சரியா பூனை பதிவிற்கு வந்துட்டீங்களே :)
      நன்றி தோழி, எனக்கும் மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
    2. கிரேஸ் இதை வாசித்ததும் (அன்றே வாசித்துவிட்டேன்...கருத்து இட முடியலை) எனக்கு உடன் நினைவுக்கு வந்தது பூஸார் தான்!!! ஆஹா அவர் இதை அறிந்தால் ஒரு குதியாட்டம் போட்டுவிட்டுப் போவாரே ஆனால் அவர் இத்தளம் அறிவாரோ என்று நினைத்தால் இப்போ தெரிகிரது பூசார் கால்தடம் பதியாத தளமே இல்லை என்று ஹா ஹா ஹா ஹா....

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் கீதா.. ஹாஹா பூஸார் தடம் பதியாத்தளங்கள் கொடுத்துவைக்காதவை. :) அவர் பதிவுகளும் சரி, கருத்துகளும் சரி நம்மை மகிழ்விக்கும். இனிய தோழி அவர், உங்களைப் போல

      நீக்கு
  7. அழகிய கவி.... நகைச்சுவை கலந்த உண்மை ..:)..

    //நான் என்ன புதிதாய்ச் சொல்ல,
    "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு"
    கேட்கக் காதுள்ளவன் கேட்கட்டும் //

    அது என்னவாயினும் பூனையாரே ஜெயிச்சதாகவே மீயும் நம்பிட்டுப் போறேன்ன்:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா
      வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி அதிரா

      நீக்கு
  8. மகத்தான தத்துவத்தைப் போகிற போக்கில் நம் செல்லங்களின் வழி கவித்துவமாய்ச் சொல்லிவிட்டீர்கள். கிரேஸ்...அருமை...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மிகவும் அருமை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...