என்றாவது ஒரு நாள் - கீதா மதிவாணன்


மந்தையோட்டிச் சென்றிருக்கிறான் கணவன். பிள்ளைகளுடன் காட்டில் தனித்தொரு வீட்டில் வாழ்கிறாள் அவன் மனைவி. வறுமையுடன் அவள் சந்திக்கவேண்டியிருந்தப் பிரச்சனைகள் அதிகம். அப்படியிருக்க, வீட்டில் நுழைந்த கருநாகம் ஒன்றிடமிருந்துப் பிள்ளைகளைக் காக்க இரவெல்லாம் விழித்துப் பார்த்திருக்கிறாள். அவளோடு காத்திருக்கிறது அலிகேட்டரும், மரத்தடுப்பின் ஒரு பொந்திற்குள் நுழைந்திருந்த கருநாகத்தை எதிர்பார்த்தபடி.. மெழுகுவர்த்தி அணையும் தறுவாயில் தன் கடைசி ஒளியைச் சிந்திக்  கொண்டிருந்தது.
பழைய நினைவுகளை அசைபோட்டபடி விழித்திருந்த மந்தையோட்டியின் மனைவியுடன் நாமும் அந்த சமையலறை மேடையில் அமர்ந்திருந்தது போல் இருக்கும், 'மந்தையோட்டியின் மனைவி' வாசிக்கும்பொழுது. அலிகேட்டர் -அவர்களின் விசுவாசமான  நாயின் பெயர். கதை வாசித்துப் பலநாட்களுக்கு 'மந்தையோட்டியின் மனைவி' மனதைவிட்டு அகலவில்லை. விறகு சேகரிக்கச் சொன்னவன் ஏமாற்றியதை நினைத்து அழும் அவள் கண்ணீரைத் துடைக்கிறேன் என்று விரலால் கண்ணைக் குத்திகொண்டு சிரிப்பாள், பல துளைகளிருந்த கைக்குட்டையைப் பார்த்து. இக்காட்சி ஏனோ என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.

'சீனத்தவனின் ஆவி' கதையில் தொழிலாளி ஒருவனைத் துரத்தும் ஆவி ஒன்று. அந்தத்  தொழிலாளி ஓடும்பொழுது நாமும் பயந்து அந்த மலைப்பாதையில் ஓடுவது போன்றதொரு உணர்வு. காதருகே 'தொப் ..தொப்' என்று ஆவி தொடரும் சத்தம் கேட்கும்.


'சமையல்காரரின் நாய்' கதையில் ஆட்டுரோமம் கத்தரிப்பவர்களுக்கும் பதப்படுத்துபவர்களுக்கும்  ஓய்வின்றி உணவு பரிமாறும் சமையல்காரர், அவரை வம்பிழுக்கும் வந்தேறிகள் என்று நகரும் கதையில், ஒருநாள் அவர்கள் அவரின் நாயை உரோமம் கத்தரித்து மழுங்கடித்துவிடுகிறார்கள். எப்பொழுதும் போலன்றி வெகுவாகச்  சினம் கொள்கிறார் சமையல்காரர். கதையின் முடிவில் நச்சென்று அதன் காரணம் ஒருவரியில் சொல்லப்பட்டிருக்கும்.

'மலாக்கி' என்றொருவன் தான் சம்பாதிக்கும் பணத்தைத் தேவையின்றிச் செலவழிக்காமல் வாழ்வது, ஏன் தேவையான உடுப்பு கூட வாங்காமல் கிழிந்த உடுப்புடன் இருப்பது, அவனை உடன்வேலை பார்ப்போர் கேலி செய்வது என்று நகரும் கதையின் இறுதியில் மலாக்கியின் மறுபக்கமும் அவன் கனவுகளும் வெளிவரும். கர்ப்பிணி பெண்ணொருத்தியைக் காப்பாற்றவேண்டி காளையினை எதிர்கொண்டு சாகும் மலாக்கி நெஞ்சைப் பிழிகிறான். அவனைக் கேலி செய்தவர்கள் மனம் நொந்து அவன் கனவிற்கு உதவுவது அன்றைய தொழிலாளர்களின் சாதாரண வாழ்வு முறையைக் காட்டுகிறது. விளையாட்டாக ஒருவரை வம்பிழுப்பதும் பிறகு வேதனைப்படுவதும் என்று.

வயல்களைக் காக்கப் பூனைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்ற செய்தியும் அறியக் கிடைக்கிறது. "மரியாவின் விளையாட்டு எல்லைமீறியதாக இருந்தது. அசிங்கமானவை, அருவருப்பானவை, குறையுடலுடன் ஊர்ந்து கொண்டிருப்பவை உயிரியல் பாடத்தில் இதுவரை அறிந்திராதவை,இன்னமும் எங்களால் வகைப்படுத்த இயலாதவை என பலவற்றைக் கொண்டு வந்துகொண்டிருந்தது". இந்த வரிகள் பூனைகள் எவ்வளவு பெரிய வேட்டைத்தன்மை கொண்டிருந்தன என்று சொல்கின்றன.
'புதர்க்காடுறைப் பூனைகள்' சுவாரசியமான கதை. முயலை வேட்டையாடுவதோடு அல்லாமல் கருநாகத்தையும்  கொண்டுவந்து வீட்டிற்குள் போடுமாம் அப்பூனைகள்!

"புதர்ச்செடிகளின் நடுவே பிணமாய் அழுகி நாறிக் கிடந்திருப்போம். ஒருவேளை யாராவது நம்மைப் பார்க்க நேர்ந்தாலும் அவர்கள் தங்கள் பயணத்தைக் கைவிட்டுவிட்டு உலகுக்கு நம்மைப் பற்றித் தகவல் தெரிவிக்க விழையப்  போவதில்லை. ச்சே..என்ன உலகம் இது!" 'என்றாவது ஒருநாள்' என்ற கதையில் நாடோடியின் வரிகள் மனதை அறுக்கும்.


"பெரிய பெரிய மீசையுடனும் கையில் துப்பாக்கியுடனுமான மனிதர்களை கலிபோர்னியாவில் கண்டிருக்கிறேன். ஆனால் துளைக்கும் பார்வைக்குப் பின்னால் இயல்பான பளிச்சிடும் புன்னகை இருக்கும் மனிதர்களை ஆஸ்திரேலியாவில்தான் பார்க்கிறேன்"

" அப்பாவின் மனம் பண்ணையிலோ விவசாயத்திலோ இருக்காது. புழுதிவெளியில் ஆங்காங்கே தலைகாட்டிக்கொண்டிருக்கும் பயிர்களையும் முளைவிடப் போராடிக் கொண்டிருக்கும் வித்துகளையும் வயலென்றும், பாதிக்குமேல் பட்டுப்போய் வீழ்ந்துகிடக்கும் மரங்களைக் கொண்ட இடத்தைத் தோப்பென்றும் சொல்வதினின்று வெகுதூரம்  விலகி  எங்காவது போயிருக்கும்."

"அந்த மணப்பெண்ணின் கண்களைக் கட்டி ஒரு பெரிய வாளியில் வைத்து சுரங்கக்குழிக்குள் இறக்கிவிட்டு, அவள் எந்தப்பக்கம் கையைக் காட்டினாளோ, அந்தப் பக்கம் தோண்டியெடுத்த தங்கத்தைக் கொண்டு அவளுக்கு மோதிரம் செய்யப்பட்டது என்றும் சொல்வார்" .

எஜமானனுக்கு ஏதாவது நேர்ந்தால் தனியாக வீட்டிற்கு ஓடும் குதிரைகள் செய்தி உணர்த்திவிடும். அப்படித் தன் குதிரை நிறைமாதக் கர்ப்பவதியாய் பிரசவ நேரம் நெருங்கியிருந்த மனைவியிடம் சென்றுவிடக் கூடாதே என்று குதிரையைச் சுட்டுவிடும் ஜாப் என்பவன், அதைக் குறித்து வருந்தும்போது வைத்தியர் சொல்வார், "கவலைப்படாதே ஜாப். நானும் ஒரு மிருகத்தை சுட்டிருக்கிறேன். எனக்கு செல்லமான மிருகம் அது. ஒரு பெண்ணை அதனிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு சுட்டேன்."  இதன் பின் வரும் வரிகள் அழுத்தமான வேறு கதை சொல்லும்.  "ஆனால், அந்த மிருகம் காற்சட்டை அணிந்திருந்தது. இரண்டு கால்களால் நடந்தது". 'அவன் ஏன் அப்படிச் செய்தான்' கதை.

'ஆர்வி ஆஸ்பினாலின் கடிகாரம்' மற்றும் 'துக்க விசாரணை' இரண்டும் தொடர்க்கதைகளாய் மனதைப் பிசையும்.

சுரங்கத் தொழிலாளிகள், ஆட்டுரோமம் கத்தரிப்பவர்கள், அடிமட்டத் தொழிலாளர்கள், ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகள் என்று பலதரப்பட்ட மக்கள் தான் கதைகளின் மாந்தர்கள். இவர்களின் வாழ்வியல், வறுமை, காதல், ஏக்கம், கனவுகள், ஆஸ்திரேலியாவின் விலங்குகள் என்று அனைத்தும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன இக்கதைகளில். வரலாற்று மூலமாகவும் இக்கதைகள் அமைந்துள்ளன. 

ஆறடி நீளமும் ஓரடி அகலமும் கொண்ட இகுவானா என்ற பல்லிவகையைச் சேர்ந்த விலங்கு திடீரென்று பாதை கடக்கும். மேரி ஆன் என்று அழகான பெயர் ஒரு பூனைக்கு, என்னை மிகவும் ஈர்த்தது. வறுமை, சுமை என்று என்ன இருந்தாலும் ஒரு அழகியலோடு வாழ்ந்தார்களோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு கதையின் கதைமாந்தரும் அழகாக வருணிக்கப்பட்டிருக்கும் கதைகள். கதைகளோடு பல தகவல்கள்.


இப்படியே நான் சொல்லிக்கொண்டே போனால் சுவாரசியம் போய்விடும் அல்லவா? அதனால் மிகவும் பிரயத்தனப்பட்டு கடிவாளமிடுகிறேன். மொழிபெயர்ப்புக் கதைகள் என்றாலும், இவற்றிலிருக்கும் தமிழ்ச்சொற்கள் நம்மைச் சுண்டி இழுக்கும். நீளிருக்கை, கணப்படுப்பு, பொறுப்பிலிகள், மலையிடைவெளி என்று பல சொற்கள் அழகாகக் கையாளப்பட்டுள்ளன. கீதாவின் தமிழைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? தித்திக்கும் தமிழ் கீதாவின் எழுத்துகளில் இன்னும் இனிமையாய்த் தித்திக்கும்.

வலைத்தளம் மூலம் கீதமஞ்சரி (வலைத்தள இணைப்பு) என்று அறிமுகமான அன்புத்தோழி கீதா மதிவாணன் அவர்களின் 'என்றாவது ஒரு நாள்' (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்- ஆஸ்திரேலிய காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள் --- மூல ஆசிரியர் – ஹென்றி லாசன்) நூலினை வாங்கி வாசித்து மகிழுங்கள்.


பின் குறிப்பு:
சில கதைகளை மட்டுமே வாசித்திருந்த நேரத்தில் அமெரிக்காவிற்கு வந்திருந்த ஒரு நண்பரின் தாயார் 'என்றாவது ஒரு நாள்' நூலினை எடுத்துச் சென்றார். அவர் வாசித்து முடித்து இன்னும் சில தாய்மார்கள் வாசித்து..உலா சென்றிருந்த கீதமஞ்சரியின் நூல் என்றாவது ஒரு நாள் என்னிடம் வந்துசேரும் என்று காத்திருந்தேன்.

'மந்தையோட்டியின் மனைவி'யும் 'சீனத்தவனின் ஆவி'யும் மனதை விட்டகலாமல் நூலை முழுவதும் படிக்கவும் எழுதவும் ஆசையைத் தூண்டிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் கடல் கடந்து வந்து தமிழ்வாசிக்க ஆவலுடன் கேட்டுப் படித்துக்கொண்டிருந்த அம்மாக்கள் மற்றும் அத்தைகளும் வாசிக்கட்டுமே என்று காத்திருந்தேன். ஒவ்வொருவரும் சொன்னது, "அருமையா எழுதியிருக்கும்மா உன் பிரெண்டு", "நல்லா இருக்குனு சொல்லும்மா", "ஆஸ்திரிலேயாவில் இப்படியெல்லாம் நடந்திருக்கு என்னம்மா" போன்ற அருமையான விமர்சனங்கள். எனக்கும் பெருமை, நன்றி கீதமஞ்சரி. :)

ஒரு வழியாக நூல் என்னிடம் சேர்ந்த அந்த 'என்றாவது ஒரு நாள்' உம் வந்தது. ஆனால் அதைத்தாண்டியும் நான் எழுதுவதற்கு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. கீதமஞ்சரியின் நூல் ஆஸ்திரேலியாவில் ஜனவரி இருபத்தாறாம் நாள் வெளியிடப்படுவது நிறைமகிழ்ச்சி அளிக்கிறது. ஆஹா! இதற்காகத்தானா என் விமர்சனம் தடைப்பட்டது! சரியான நேரத்தில் வருகிறதே! (இப்படிச் சொல்லி என்னை சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.)



"இந்தியக் குடியரசு & ஆஸ்திரேலிய தினமென்று
பிறந்த நாடும் புகுந்த நாடும்
கொண்டாடும் சிறப்புடைநாளில்
ஆர்வலர்கள் மத்தியில் அரங்கேறக்கூடும்
அழகாயொரு அறிமுகம்..
விரிவாய் சில விமர்சனம்...
சுவையாய் சில சொல்லாடல்...
சுகமாய் சில உளக்கூடல்...

இயன்றோர் வருகை தந்து சிறப்பித்திடுக!
இயலாதோர் இருக்குமிடமிருந்தே அன்பை வழங்கிடுக!" 

- கீதா மதிவாணன் 

மனம் நிறைந்த வாழ்த்துகளும் அன்பும் கீதமஞ்சரி. இன்னும் ஆஸ்திரேலிய விலங்குகள், பறவைகள் என்று பல தகவல் சொல்லும் உங்கள் படைப்புகள் பல வெளிவரவேண்டும் என்று விழைகிறேன்.

-வி.கிரேஸ் பிரதிபா

38 கருத்துகள்:

  1. உங்க வீட்டில் இருந்து பல புத்தகங்களை சுட்டுக்கொண்டு வரவதற்க்காகவது ஒரரு தடவை உங்கள் வீட்டிற்கு வர வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டுக்கும் வாங்க மதுரைத்தமிழன். ஏராளமான புத்தகங்களை சுட்டுக்கொண்டு வரலாம்.. :)))

      நீக்கு
  2. அரியதோர் மொழிபெயர்ப்பிற்கு எனது வாழ்த்துக்கள் ! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
  3. சற்றே தாமதமானாலும், பலரையும் இந்த நூலினைப் படிக்க வைத்து அவர்களின் பாராட்டுகளையும் நூலாசிரியருக்கு வாங்கிக்கொடுத்துள்ளீர்கள் என்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியே.

    //நீளிருக்கை, கணப்படுப்பு, பொறுப்பிலிகள், மலையிடைவெளி என்று பல சொற்கள் அழகாகக் கையாளப்பட்டுள்ளன. கீதாவின் தமிழைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? தித்திக்கும் தமிழ் கீதாவின் எழுத்துகளில் இன்னும் இனிமையாய்த் தித்திக்கும்.//

    சூப்பர் ! :)

    வித்யாசமான மிக அழகான நூல் அறிமுகம் அருமையோ அருமை.

    பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. தோழி, நூலின் பிரதி தங்களிடம் உள்ளதா? வாசிக்க ஆவலாய் உள்ளது. விரைவில் உங்களை நேரில் சந்திக்க சந்தர்ப்பம் வாய்க்குமென ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூலை வாசிக்க விருப்பம் தெரிவித்துள்ளமை மகிழ்வளிக்கிறது. நன்றி தோழி.

      நீக்கு
    2. கண்டிப்பாகத் தருகிறேன் தோழி. என்னிடம் இருக்கிறது.

      நீக்கு
  5. அருமையான மொழிபெயர்ப்ப்ற்கு வாழ்த்துகள்! தங்கள் விமர்சனமும் அருமை. நல்ல புத்தகம். சகோ/தோழி கீதாமதிவாணன் அவர்களின் புத்தகத்தைப் பற்றி தளங்களில் வாசித்தோம். பகிர்வுக்கு மிக்க நன்றி! உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்! கீதாமதிவாணண் அவர்களுக்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  6. அடடே... ஆஸ்திரேலியாவில் வெளியிடப்படுகிறதா? வாழ்த்துகள் சகோதரி கீதமஞ்சரிக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம்.. இங்கிருக்கும் உயர்திணை என்ற அமைப்பின் சார்பாக நூலை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

      நீக்கு

  7. அருமையான பதிவு
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரி. அருமையான வாசிப்பு. வாசிப்பே நமது நல்ல நண்பன். நிறைய வாசியுங்கள். இன்னும் எழுதுங்கள். நமது வலைத்தளம் : சிகரம்

    பதிலளிநீக்கு
  10. அருமையான விமர்சனம் கிரேஸ் . காலத்தே வருவது குறித்தும் மகிழ்ச்சி. அன்புத்தங்கை கீதாவுக்கு வாழ்த்துகள். :)

    பதிலளிநீக்கு
  11. நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுமளவுக்கு அமைந்துள்ள விமர்சனத்துக்குப் பாராட்டுக்கள் கிரேஸ்! கீதாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  12. அழகான சிறப்பான நூலறிமுகம் & விமர்சனத்துக்கு மிகவும் நன்றி கிரேஸ். உங்கள் தயவால் இன்னும் சிலர் நூலை வாசித்திருப்பதும் பாராட்டியிருப்பதும் மகிழ்வளிக்கிறது. அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துவிடுங்கள்.விமர்சனத்தோடு நூல் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருப்பதற்கு நன்றி. உங்களுக்கு என் அன்பும் நன்றியும்.

    உங்களுடைய அழகான ரசனையான மற்றும் சமுதாயக்கடமை இழையோடும் கவிதைகளின் ரசிகை நான்.. உங்களுடைய இரண்டாவது கவிதை நூல் வெளியீட்டுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அருமையான நூல் பலரைச் சென்றுசேர வேண்டும் என்பதே என் விருப்பம் கீதமஞ்சரி. வாசித்து நன்றாக இருக்கிறது என்று சொன்னபோழுதே நன்றி சொல்லிவிட்டேன். மீண்டும் சொல்லிவிடுகிறேன்.

      நான் வியந்து மதிக்கும் நீங்கள் என் ரசிகை என்று சொல்வது பெருமகிழ்ச்சி தருகிறது. மனம் நிறைந்த நன்றியும் அன்பும் தோழி.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...