காட்டுத்தீ


காட்டுத்தீ... காட்டுத்தீ
எங்கோ என்று செய்திவரும்
ஐயோ!
மரங்கள்..!! மிருகங்கள்!!
பறவைகள் பறந்திருக்குமா?!!
மோதிடும்  எண்ண அலைகள்!

ஆனால் இன்று?
சென்றமாதம் மலையேறி
வியந்து ரசித்த
காடழிவதின் வெப்பம்
கண்ணில் உணர்கிறேன்
எரிச்சலும் புகைமூட்டமுமாய்!

குளிருக்குத் தயார்செய்த
அணில் என்னவாயிருக்கும்?
மூச்சு முட்டும் வேளை
எண்ணுகிறேன்
கடவுளே, முதியவரை
முடியாதவரைக் காப்பாற்று!
தளிர்க்கும் நுரையீரல்கள்?
உலக வெம்மை
இப்படிச் சுடுகிறதே!

அலறும் தீயணைப்பு வண்டிகளும் 
அவசர உதவி வாகனங்களும்
ஹெலிகாப்டர்களும்
தீயணைக்கப் போகிறதோ
மூச்சுத் திணறிய யாரையேனும்
காப்பாற்றப் போகிறதோ!
எதுவாயினும்...
போதிய வண்டிகள் இருக்கட்டும்
மருத்துவ வசதிகள் இருக்கட்டும்
காற்றும்  கொஞ்சம் அடங்கட்டும்
காட்டுத்தீ முற்றும் அடங்கட்டும்!





Ref: http://www.11alive.com/news/local/wildfire-spreads-10000-acres-in-n-georgia/350760895

26 கருத்துகள்:

  1. எண்ணத்தில் மோதும் இந்த வேதனை எண்ணங்கள் கஷ்டப்படுத்தும்தான்.

    பதிலளிநீக்கு
  2. காட்டுத்தீ விரைவில் அடங்கும் என்று நம்புவோம்....

    பதிலளிநீக்கு
  3. 500 1000 செல்லாது என்பதை காட்டுத்தீயாக உபமானித்த கவிதையை வியக்கிறேன்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியும் எடுத்துக்கொள்ளலாமோ! நன்றி சகோ.
      ஆனால் நான் உண்மையாக காட்டுத்தீ பற்றி எழுதினேன்.

      நீக்கு
  4. காட்டுத்தீயில் இயற்கையாய் அழிவதை விட, செயற்கையாக வைக்கப்படும் மற்றும் வெட்டப்படும் அழிவுதான் அதிகம் பா! என்றாலும் உன் கவிதையில் பற்றிய வெப்பம் உறைக்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அண்ணா.. செயற்கை அழிவின் தாக்கமே இயற்கையாகவும் வந்துவிடுகிறது.
      நன்றி அண்ணா

      நீக்கு
  5. அருமையான வரிகள்

    உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா.
      இணைப்பிற்கு நன்றி, இணைவதற்குக் கேட்டுள்ளேன்.

      நீக்கு
  6. காட்டுத் தீ ரொம்ப நல்லாயிருக்கு...
    ஆனால் காடு அழிவது என்பது வேதனைக்குரியது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ.
      ஆமாம்..நான்கு மாநிலங்களில் சுமார் 40 இடங்களில் இன்னும் எரிகிறது.. :(

      நீக்கு
  7. பதில்கள்
    1. ஆமாம்..இன்னும் எரிகிறது அண்ணா.

      உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. நன்றி அண்ணா.

      நீக்கு
  8. காட்டூத்தீ பற்றினால் விடாது! பதற்றம் அதிகரிக்கிறது!

    பதிலளிநீக்கு
  9. மனித தவறால் அழியும் இயற்கை ..
    வருத்தம்தான்

    பதிலளிநீக்கு
  10. மனிதர்களை விட ஐந்தறிவுகளுக்கு சில விஷயங்களில் நுண்ணுணர்வு அதிகம்!அணில் தப்பித்து இருக்கும் என்று நம்புவோமே :)
    த ம +1

    பதிலளிநீக்கு
  11. மனிதனின் சுயநலத்தால் ஏற்படும் விளைவு! பாவம் அவை! மனம் வெம்புகிறது அந்த அணில் என்னாயிற்றோ என்று..கண்டிப்பாகத் தப்பித்திருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா...
      அணில் தப்பியிருக்குமோ தெரியவில்லை. ஆனால் மற்றொரு மாநிலத்தில் மக்களும் வீடுகளும் தீக்கிரையாகினர்.. :(

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...