புதையல்

Image:thx Internet

கரைக்குவர நினைக்கும்போதெல்லாம் 
ஓரலை உள்ளிலிழுக்கும் 
புது திசை...புதுப் பார்வை 
வித்தியாசமான மீன்கள் 
விதவிதமான சிப்பிகள் 
கையில் எடுத்துக் கொண்டு 
கரைவரப் பார்ப்பேன்..

மற்றொரு அலை
சிறுகுழந்தையாய்க்  கைகளை
இறுக்கிப் புதையல் 
வைத்திருந்ததைப் பார்த்து 
சிரித்தாள் 
கடல்மங்கை 
அலைக்கரம் ஒன்றால் தட்டி 
சிலவற்றைப் பறித்துக் கொண்டாள் 
இருப்பதை 
இன்னும் இறுக்கிக்கொண்டு 
கரையைப் பார்த்தேன்..
அலைக்கரம் அசந்தநேரம் 
கரைசேர்ந்தேன்..
இனி கைபிரித்து 
ஒவ்வொன்றாய்ப் பார்ப்பேன் 
மணலும் ஈரமும் துடைத்து 
அழகாய் 
பார்வைக்கு வைப்பேன் 
பாருங்கள் என் புதையலென்று 
சிறுகுழந்தையாய்ப் புன்னகைத்து! 






24 கருத்துகள்:

  1. உங்களின் படைப்பை காணாததால் தமிழே தற்கொலை பண்ணிக் கொண்டதோ என்று நினைத்தேன் ஆனால் உங்கள் பதிவை கண்டதும் அது இன்னும் உங்கள் கவிதைகளால் சுவாசித்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  2. நாங்களும் ரசிக்க ரெடியாகிறோம்!

    பதிலளிநீக்கு
  3. தங்களின் பதிவு கண்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன சகோதரியாரே
    மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
  4. நானும் அலையோடு பயணித்தேன் சகோதரி....
    ரொம்ப நாளாச்சு... இனித் தொடர்ந்து எழுதுங்கள்...
    மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ..அப்படித்தான் நினைத்திருக்கிறேன். மிக்க நன்றி

      நீக்கு
  5. நீண்ட நாட்களுக்குப் பின்னர் இனியதோர் பதிவு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  6. இனி கைபிரித்து
    ஒவ்வொன்றாய்ப் பார்ப்பேன்
    மணலும் ஈரமும் துடைத்து
    அழகாய்
    பார்வைக்கு வைப்பேன்
    பாருங்கள் என் புதையலென்று
    சிறுகுழந்தையாய்ப் புன்னகைத்து! // :) -aavee

    பதிலளிநீக்கு
  7. அருமை சகோ ரசித்தேன் வரிகளை.....
    த.ம. 2

    பதிலளிநீக்கு
  8. // சிறுகுழந்தையாய்ப் புன்னகைத்து...//

    அடியேனும்...!!!

    பதிலளிநீக்கு
  9. கோடை விடுமுறையில் இந்தியா போய்விட்டீர்களா? ரொம்ப நாள் தேன்மதுர தமிழையே காணோம்?

    ***கரைக்குவர நினைக்கும்போதெல்லாம்
    ஓரலை உள்ளிலிழுக்கும்**

    பதிவெழுத நினைக்கும்போதெல்லாம் உங்களையும் பலரையும் ஏதோ ஒரு "அலை" இழுத்துவிடுகிறது போலும் னுதான் எனக்கு உங்க கவிதை தோணுது. எப்படியோ அலையோடு போராடி "புதையல்" லோட வந்துட்டீங்க. சந்தோஷம். :)


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வருண்..இந்தியா சென்றுவந்தேன். அதோடு வேறு காரணங்களும்..இனித்தொடர்ந்து எழுத நினைக்கிறேன்..பார்க்கலாம்.
      ஹாஹா அப்டியும் இருக்கலாம்..வேறும் இருக்கலாம்.. :))
      நன்றி

      நீக்கு
  10. வெகு நாட்களுக்குப் பிறகு...உங்கள் இந்தியப் பயணம் நன்றாக அமைந்திருக்கும் என்று நம்புகின்றோம்...

    உங்கள் புதையலைக் கண்டு புன்னகைக்கின்றோம்...வருக மீண்டும் உங்கள் புதையலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா..
      நன்றாக இருந்தது. உங்கள் விவேகானந்தர் குறும்படம் பார்த்தேன்..கலக்கிட்டீங்க :)) வாழ்த்துகள் அண்ணா.
      மிக்க நன்றி.

      நீக்கு
  11. நெடுநாள் கழித்து கண்டதில் மகிழ்ச்சி. அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  12. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. வாழ்த்துகள்.

    கவிதை அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. ji i recollect that john newtons famous quote... i pick up here and there a few pebbbles in the seashore
    while the OCEAN OF TRUTH lioes undiscovered before me....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...