அட..நீங்கள் வேறு! Olympics memes

Image:Thanks Google

படிபடி என்பார்
பச்சைக் குழந்தையைப் 
பள்ளிசேர்க்கப் பாடாய்ப்படுவார்
பாடமென்றால் 
கணிதமும் அறிவியலும் தான்
கணித மேதையோ 
அறிவியல் மேதையோ 
அதிகம் இல்லை 
சல்லடை போட்டுத் தேடிடுவோம் 
பாதகமில்லை!

பள்ளிதாண்டியும் வகுப்பு
அதிலும் 
முன்னால் நிற்கும் படிப்பு
ஓடாதே...ஆடாதே..
கவனமாய்ப் படி என்பார்
ஒப்பித்து ஒப்பித்து 
ஒப்பேத்தும் நிலையில் ...

திடீரென்று கூவுகிறார்
ஒலிம்பிக் ஒலிம்பிக்
தங்கம் இல்லையாம்..
பதக்கம் இல்லையாம்..
அட..நீங்கள்வேறு..
அதெல்லாம் வருத்திடுமா?
இந்த நகைச்சுவைத் திறமை 
யாருக்கும் வராது!

சிரிப்பாய்ச் சிரிக்கிறார்
கண்ணாடி முன்னிருப்பது உணராமல்..
ஒலிம்பிக் ..
அங்குபோனவர் பட்ட பாடு
அப்பப்பா யாருக்குத் தெரியும்?
அதைத் தெரிந்து 
அதற்குக் குரல் கொடுத்தால் ...
அட..நீங்கள் வேறு!



17 கருத்துகள்:

  1. உண்மை நிலையை அழகான கவிதையாக தந்து விட்டீர்கள். விளையாட்டுக்கு விளையாட்டாகக்கூட எந்த முக்கியத்துவமும் கொடுக்காத ஒரு நாட்டில் திடீரென்று ஒலிம்பிக்கில் மட்டும் தங்கம் வேண்டும் என்றால் என்ன செய்வது. 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டதே இந்தியாவிற்கு சாதனைதான்.
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை சகோ..வேதனையாக இருக்கிறது.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      நீக்கு
  2. சிந்தனை விரிப்பாக
    முத்தான வரிகள்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு கவிதை. எத்தனை கஷ்டங்களோடு இந்த விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள்..... இதிலும் அரசியல் புகுந்து நாறடிக்கிறது.... பொதுஜனமும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், போட்டியில் தங்கம் வெல்லவில்லை என்று மட்டுமே சொல்கிறார்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை அண்ணா..அதுதான் வருத்தமும் கோபமும் தருகிறது.
      நன்றி அண்ணா

      நீக்கு
  4. நிறய பேசும் கவிதைகள்
    தொடரட்டும்
    தம +

    பதிலளிநீக்கு
  5. உண்மையை உரக்கச் சொன்னீர்கள். பாராட்டுகள். (கவனிக்கவும்: அட..நீங்கள்வேறு..அதெல்லாம் வருத்திடுமா? > வந்திடுமா? )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா.
      வருத்திடுமா தான் ஐயா..ஏன் இந்த நிலை என்று வருந்தாது மிமீ போட்டு சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்...

      நீக்கு
  6. “இந்த நகைச்சுவைத் திறமை
    யாருக்கும் வராது!“
    ஆமாம்..உன் கவிதையைத்தான் சொல்கிறேன் மா.
    சிரித்துத்தான் ஆற்றவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா...நகைச்சுவை இல்லை அண்ணா. நகைக்கிறார்களே என்று கோபம்...

      நீக்கு
  7. அருமை அருமை சகோ/க்ரேஸ்!!!! உண்மை நிலையை நினைத்துச் சிரிக்கவா ஆதங்கப்படுவதா வேதனைப்படுவதா என்று தெரியவில்லை...அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...