அவள் பெண்

Image:thanks Google

ஒயிலாக நடக்கும் பாதையல்ல
முட்கள் அகற்றி, கற்கள் தாண்டி
ஏறியும் குதித்தும் 
கணக்கிலடங்காக்  காயங்கள் 
புறம் தள்ளி 

புன்னகையில் ஒளியேற்றி 
அன்பில் அரவணைத்து 
அளவற்றவைத் தாங்கி 
வெற்றியை நோக்கி நகர்வாள் 
அஞ்சாத நீர்மையுடன்...
அவள் பெண்!
ஒரு பார்வை
அவள் ஏனென்று உயர்த்திவிட்டால்...
ஒரு கேள்வி
அவள் ஏனென்று கேட்டுவிட்டால்...
அஞ்சி நடுங்கிச் 
சமூகம் தூற்றும்!




27 கருத்துகள்:

  1. உண்மை. பெண்ணின் புன்னகை வேண்டும். புன்னகைக்கு பின் மறைந்திருக்கும் கவலை, துக்கம் என எதைப் பற்றியும் எவருக்கும் கவலையில்லை.புன்னகைக்கும் உதடுகள் கேள்வியெழுப்ப துவங்கி விட்டால், அதைப் பொறுப்பார் யாருமில்லை. உண்மை வரிகள். பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி தோழி. நலமா?

      நீக்கு
    2. நலம் தோழி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? தங்களது புதல்வர்கள் எப்படி இருக்கிறார்கள் ?

      நீக்கு
  2. ஆம் அவள்தான் பெண்
    மிக மிக அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  3. பார்வையை உயர்த்தினாலே பதுங்குவிடுவோம் அதனால் ஏன் என்ற கேள்வி கேட்டு பயமுறுத்த வேண்டாம் இப்படி எல்லாம் ஐடியா பெண்களுக்கு தரவேண்டாம் சகோ

    பதிலளிநீக்கு
  4. ப்ரேக் எடுத்துவிட்டு எழுத தொடங்கும் போது மிக வீரியமாக கவிதை வெளிவருகிறேதே

    பதிலளிநீக்கு
  5. உன்மையில் பார்வையை உயர்த்தவிடாமலே இந்த ஆண் சமுகம் அமுக்கிவிடுகிறது, ஏன் என்று கேட்டால் ஆளையே இல்லாமலே ஆக்கிவிடுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோ...இப்பொழுது குரல் கொடுத்தாலாவது நாளைக்கு நல்ல மாற்றம் வரும் என்ற நம்பிக்கைதான்..

      நீக்கு
  6. உள்ளத்தை உறுத்தும்
    அருமையான பா வரிகள்



    குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
    http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

    பதிலளிநீக்கு
  7. ji yes descrimination prevails in the society ...in the case of women
    let us hope things would improve...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...