நிமிர்ந்தோங்கி வாழ்ந்திடவே



தந்தையுடன் தானும் மதித்தேத்தும் மாண்புகளைச் 
சிந்தைதனில் ஊன்றிச் சிறந்திடவே - எந்நாளும் 
நிந்தை விலக்கி நிமிர்ந்தோங்கி வாழ்ந்திடவே 
தந்துலகில் எண்பிப்பாள் தாய்

திருமிகு.பாரதிதாசன் ஐயா அவர்களின் பாவலர் பயிலரங்கம் முகநூல் பக்கத்திற்காக எழுதியது. வெண்பா எழுதக் கற்றுக்கொள்ளும் தளம் அமைத்திருக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி.

20 கருத்துகள்:

  1. நல்லாயிருக்கு...
    வெண்பா எழுத ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. அவப்பெயர் தரும் செயல்கள், கெட்டவை விலக்கி என்று அண்ணா

      நீக்கு
  3. இந்த கவிதை ஏரியாவில் நான் வீக் என்பதால் இது நன்றாக இருக்கிறது இல்லை என்று சொல்வதைவிட நீங்க எழுதினா நல்ல கருத்துடையதாக இருக்கும் என்று சொல்லி செல்லுகிறேன்

    பதிலளிநீக்கு
  4. முந்திவரும் தென்றலென முத்தான பாதந்து
    சிந்தையதில் நின்றிட்ட சோதரியே -வந்துநிதம்
    சந்தநயம் ஊறுகின்ற சத்தான பாபலவும்
    தந்துநிதம் வென்றுவிடு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தநயம் ஊறுகின்ற சத்தான பாபலவும்
      தந்திடவே வாழ்த்திடும் தங்கள்பா பேருவகை
      ஈந்திடுதே! ஊக்கமிது இங்கிவளைத் தூண்டுகையில்
      தந்திடுமா காலம் தடுப்பு

      மிக்க நன்றி

      நீக்கு
  5. இதே மாதிரி தான் போன வாரம் 'ஆலியா பட்' டுக்கு ஒரு பிறந்த நாள் பா எழுதியிருந்தேன். ஆனா யாருமே கண்டுக்கலே. :(.

    ஆனா உங்களுக்கு ஊக்கம் தர நாங்கெல்லாம் இருக்கோம்.. ;)

    பதிலளிநீக்கு
  6. க்ரேஸ்/சகோ! ரொம்ப அழகா எழுதிருக்கீங்க. கலக்குறீங்க.

    நாங்கள் கவிதை எழுதுவதில் ரொம்பவே வீக்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...