காதலே உன்னைக் காதலிக்கிறேன்


என்னைப் புரியாமல்
உணராமல்
தூற்றுகிறார்களே
என்று கலங்கும்
காதலே
உன்னைக் காதலிக்கிறேன்
கலங்காதே!

22 கருத்துகள்:

  1. உடுமலை கொலையைப் பார்த்தால் ,உங்க பாணி காதல்தான் வாழும் போலிருக்கு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
      உடுமலை கொலைக்குப் பிறகு பலரும் காதலைக் காய்ச்சி ஊற்றுவதால் வந்த கவிதை சகோ..பாவம் காதல்!

      நீக்கு
  2. காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்
    கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும்
    காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்
    கானம் உண்டாம்; சிற்பம்முதல் கலைகளுண்டாம்
    ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே"

    என்றார் பாரதி. ஆனால் இப்பொதெல்லாம் காதலினால் கிடைப்பது என்ன என்பது வருத்தமளிக்கிறது.

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஸ்ரீராம்.
      பாரதி காதலைப் புரிந்துகொள்வீர் என்ற வரியைச் சேர்த்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.
      கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      நீக்கு
    2. பாரதி 'செய்வீர்' ன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டு 'செஞ்சுட்டாங்க' போலிருக்கு..

      நீக்கு
  3. பார்ரா... காதலுக்கு என்னவொரு சப்போர்ட்டு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா..பாவம், காதல் இடியும் அடியும் படுகிறது. என்னைக் காமம் என்று நினைக்கிறீர்களே என்று நொந்து அழுகிறது..அதனால் என் சப்போர்ட் :)
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா

      நீக்கு
  4. காதலை புரிந்து கொள்ள முடியாமல் எல்லாம் ஒண்ணும் இல்லை. அழகு எப்படி நிரந்தரமானது இல்லையோ அது போல தான் கொவ்ரவமும்னு புரிஞ்சுகிட்டாலே போதும்.

    பதிலளிநீக்கு
  5. பெற்றோருக்கும் பிள்ளைங்களுக்கும் கட்டாய கவுன்சலிங் செய்ய வேண்டிய காலமிது :(

    பதிலளிநீக்கு
  6. காதலைக் காதலித்து விட்டால் - கவலை ஏது?.. கலக்கம் ஏது?..

    பதிலளிநீக்கு
  7. கவிதை சிறியதாக இருந்தாலும் மிக அருமையாக இருக்கிறது...


    நீங்கள் பகிர்ந்த போட்டோவில் இருக்கும் தகவல் என்னைப்பற்றி சொல்லியது போல இருக்கிறது . அதில் மதுரைத்தமிழன் என்று இருக்க வேண்டிய இடத்தில் கோஸ்ட் என்று சொல்லிவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  8. செமை சகோ/க்ரேஸ்

    காதலையே காதலித்தல் ஆஹா அப்புறம் என்ன பிரச்சனை..

    பதிலளிநீக்கு
  9. காதலைக் காதலிக்கும் போது
    கண்டிப்பாக வாழ்வு இனிக்கும்...
    நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  10. 'வெட்டி கெளரவம்'...வெட்டிச் சாய்த்தும்,'ஆணவக் கொலைகள் பல நடந்தும்,காதல் மண்ணில் துளிர்த்துக்கொண்டே இருக்கும்.
    காதலைக் காதலிப்பவர்கள் இருக்கும்வரை,காதல் வாழும்.

    பதிலளிநீக்கு
  11. வரவர சுருங்கச்சொல்லி ....விரிவாக்குகிறிர்கள்...
    நல்ல கரு...அழகிய பிரசவம்....

    பதிலளிநீக்கு
  12. காதலை காதலிக்கலாம் ..அருமை

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...