காதல் ஓய்வதில்லை

Image: thanks Google

ஊற்றெடுக்கும் கவிதைகளை
ஒவ்வொன்றாய் அனுப்புகிறேன்
மூச்சடைக்கும் என்பதால்
ஊற்றெடுக்கும் காதலையோ
மொத்தமாய் அனுப்புகிறேன்
மூச்சடைக்கும் எனக்கென்பதால்
கவிதை ஓய்ந்தாலும்
காதல் ஓய்வதில்லை

24 கருத்துகள்:


  1. காதலைப் போல உங்கள் கவிதையும் ஓயப்போவதில்லைதான் காரணம் தமிழ்கவிதை உங்கள் மூச்சாச்சே

    பதிலளிநீக்கு
  2. என் இலக்கியத் தங்கையே!
    உன் கவிதையும் ஓயாது,
    காதலும் ஓயக்கூடாதுன்னு
    வாழ்த்துறேன்'டா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் சிரம் தாழ்ந்த நன்றி அண்ணா. :)

      நீக்கு
  3. ரசனைகளும் ஓய்வதில்லை! தம வாக்கு பின்னர்!

    பதிலளிநீக்கு
  4. ஆஹா... இப்படி எழுதினால் நாங்கள் என்ன செய்ய?

    ஆனாலும் ஓயவே வேண்டாம் உங்கள் கவிதைகளும் காதலும் வாழ்த்துகள் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, உங்க அளவுக்கு வர முடியுமா? :)
      இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள் சகோ

      நீக்கு
  5. சூப்பர் ஜி சூப்பர்..கலக்குறீங்க போங்க மா..காதலும் ஓயவேண்டாம் கவிதையும் ஓயவேண்டாம் தொடரட்டும்..

    வாழ்த்துகள் சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)
      இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி வைசாலி

      நீக்கு
  6. கவிதை ஓய்ந்தாலும் காதல் ஓயக்கூடாது...
    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  7. ஒன்றே வரினும் நன்றே வருதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா, மகிழ்ச்சியுடன்.

      கண் இப்பொழுது பரவாயில்லையா ஐயா?

      நீக்கு
  8. அருமை சகோ/க்ரேஸ்! கவிதை ஓய்ந்தாலும்
    காதல் ஓய்வதில்லை// கவிதைகள் வற்றலாம் ஆனால் காதல் வற்றக் கூடாது!!! என்றுமே!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...