உணர்ந்துநீ பிழை


கூரை கழுவியபின்
வீதி சேரும் மழை;
கூட்டிப் பெருக்கும் குப்பை
வீதி முனையில் குவியும்;
வாய்ப்பிருந்தால் அதுவும்
ஆயாசமின்றி அண்டை நிலத்தில்!

தொல்லை இல்லை என்றே
பிழையாக எண்ணி
கொசுவிற்கும் நாற்றத்திற்கும்
கதவடைத்து விடலாம்
வெள்ளமென்று வரும்வரை
அள்ளிவந்துக் கொட்டும்வரை!

வெள்ளமென்று வந்தபின்
மழையைப் பழித்துவிட்டு 
மறப்பது பெரும் பிழை!
மழைநீர் வடிகால் அதனுடன்
குப்பை மேலாண்மை
இரண்டும் முக்கியத்தேவை 
உணர்ந்துநீ பிழை!

30 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோ.உண்மை தான் இரண்டையும் உணர்ந்து வாழ வேண்டும்.அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  2. மழைநீர் வடிகால் அதனுடன்
    குப்பை மேலாண்மை
    இரண்டும் முக்கியத்தேவை
    உணர்ந்துநீ பிழை!

    ரத்தினச் சுருக்கம்.. இன்றையத் தேவை இதுதான்..

    ஆனாலும், உணர்ந்து கொள்வரோ - மக்கள்?...

    பதிலளிநீக்கு
  3. தமிழகத்துக்கு மிகவும் தேவையான கவிதை .

    பதிலளிநீக்கு
  4. நல்ல விளக்கம், தேவையான வரிகள்,,

    பதிலளிநீக்கு
  5. பிழை..பிழை...
    திருத்தாவிட்டால்
    வாழ்வே ஆகும் பிழை! அருமையான கவிதைம்மா சுற்றுச் சூழல் கவிதைகள் என்றே ஒரு தொகுப்பு போடலாம் போல உள்ளதே! முயல்க! த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! நன்றி அண்ணா
      அடுத்த தொகுப்புபற்றி யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அண்ணனின் அருமையான யோசனை :-) மனமார்ந்த நன்றி அண்ணா

      நீக்கு
  6. உணர வேண்டிய அவசியத்தை உணர்த்திய விதம் நன்று.

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் சொல்லுவது போல் உணர்ந்தால் பிழைக்கலாம்தான். ஆனால் வெள்ளம் வந்தும் மக்கள் உணர்ந்தார்கள் இல்லை என்பதுதான் நிதர்சனம். .குப்பை மட்டுமின்றி எந்த விதத்திலும் உணரவில்லை..என்பதுதான் கூடுதல் வேதனை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வேதனை தான் அண்ணா ... இன்னும் எத்தனைக் காலம் உணராமலிருப்பர் என்று வருத்தமாக உள்ளது.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா/கீதா

      நீக்கு
  8. சென்னை வெள்ளம் தந்த கவிதை!
    அருமை!
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ.. மறந்து விட்டார்களே என்ற வருத்தம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  9. வெள்ளம் வரும் முன் அணைகட்டலாம் என அறியாதோருக்கு என்ன சொன்னாலும் ஏறாதுப்பா! நச் வரிகள்.

    பதிலளிநீக்கு
  10. மழைநீர் வடிகால் அதனுடன்
    குப்பை மேலாண்மை
    இரண்டும் முக்கியத்தேவை

    உண்மை சகோதரியாரே
    எப்பொழுது உணரப் போகிறோமோ?
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஏக்கம் தான் அண்ணா பலருக்கும்...
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  11. தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல என்று சொல்வார்கள். அதைப் போல் வருமுன் காப்பதும் இல்லை... வந்தபின் கவனமாய் இருப்பதும் இல்லை.. எத்தனை முறை பாடங்கற்றாலும் பிழையைத் திருத்திக்கொள்ளாவிடில் கற்ற பாடத்தால் பயன்தான் என்ன? சிந்திக்கவைக்கும் பதிவு கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாச் சொன்னீங்க கீதமஞ்சரி. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிப்பா

      நீக்கு
  12. ஆம் சகோ அனைவரும் உணர வேண்டிய பிழை
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  13. மழைநீர் வடிகால் அதனுடன்
    குப்பை மேலாண்மை
    இரண்டும் முக்கியத்தேவை
    உணர்ந்துநீ பிழை!


    உணர வேண்டிய உண்மை சகோதரி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...