இளையோர் நீர்தாம் நம்பிக்கை

தம்பி தங்காய் கேட்டிடுவாய்
      தரணி நிலையைப் பார்த்திடுவாய்
இம்மண் வறட்சித் தடுத்திடுவாய்  
      இன்றே செயலில் இறங்கிடுவாய்  
தும்பக் கொடுமை எதிர்த்திடுவாய் 
      துள்ளி எழுந்தே அழித்திடுவாய் 
நம்பி அழைத்தோம் உனைத்தானே
      நாளை உலகம் நீர்தாமே



மரங்கள் வெட்டி வீழ்த்திட்டோம்
      மயங்கிச் சூழல் அழித்திட்டோம்
பரவை மட்டம் உயர்ந்திட்டால்
       பாவம் மக்கள் என்செய்வார்
கரத்தில் எடுப்பீர் வருங்காலம்
      கடந்த காலம் அரும்பாடம் 
உரம்நீ கொண்டு இணைந்திட்டால்
      உலகம் மீட்டு வாழ்ந்திடலாம்


பிந்தி வருதல் அறிந்தோமே
      பிழையைத் திருத்த விழைவோமே

சிந்தைச்  சிறகை விரித்திடுவீர்
      சிறந்த தீர்வைக் கண்டிடுவீர்
முந்தி நீவீர் முனைந்திட்டால்
      முகடும் விலகி வழிவிடுமே
இந்த உலகம் நிலைபெறவே
      இளையோர் நீர்தாம் நம்பிக்கை


பரவை  - கடல்
-----------------------------------------------------------------------------------------------------------------
'இளையோர் நீர்தாம் நம்பிக்கை' என்ற இக்கவிதை, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே வகை-(5) மரபுக்கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்ட என் சொந்தப் படைப்பே  என்று உறுதி கூறுகிறேன்.
இதுவரை எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் போட்டி முடிவுகள் வெளிவரும்வரை எங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதிகூறுகிறேன்.
நன்றி,
வி.கிரேஸ் பிரதிபா

14 கருத்துகள்:

  1. அருமை கிரேஸ் .. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆஹா அருமைமா வெற்றி பெற வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான கருத்துகள் தோழி. போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் தோழி.

    பதிலளிநீக்கு
  4. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

    இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

    நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா, உங்கள் உழைப்பிற்கு ஈடில்லை. மனம் நிறைந்த நன்றிகள். அருமையாகத் தொகுத்து இருக்கிறீர்கள்.

      நீக்கு
  5. >>> இந்த உலகம் நிலைபெறவே
    இளையோர் நீர்தாம் நம்பிக்கை!<<<

    அருமை.. அருமை!..

    வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  6. அருமை அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..!

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் கிரேஸ். மரபிலும் கலக்குங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி..உங்க அளவிற்கு முடியாது என்றாலும் போட்டிக்கான என் பங்களிப்பாக எழுதினேன்.

      நீக்கு
  8. அருமையான கவி
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  10. நம்பிக்கை தரும் கவிதை.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...