மனிதம் வாழ்தல் பண்பாடென்றால்


பிறரை மதித்தல்  பண்பாடென்றால்
    பெரிதும் தேவை இன்றைக்கு
பயங்கர வாதம் ஒழிந்திடவே
     பாரினில் பண்பாடு மிகத்தேவை



பெண்மை  போற்றுதல் பண்பாடென்றால்
    பின்னோர்  காலம் வரணுமா?
வன்கொடுமை மிகுந்த இந்நாளில்
     வழிப்படுத்தப் பண்பாடு மிகத்தேவை

அனைத்துயிர் காத்தல் பண்பாடென்றால்
    அதுவே தேவை இன்றைக்கு
அழியும் உயிர்கள் காத்திடவே
     அவனியில்  பண்பாடு மிகத்தேவை

சிறுவர் உரிமை பண்பாடென்றால்
     சிறிதும் யோசித்தல் பிழையாகும்
படிக்கும் காலத்தில் பளுசுமத்தும்
      பழிதுடைக்கப் பண்பாடு மிகத்தேவை

இயற்கை போற்றுதல் பண்பாடென்றால்
      இன்றியமையாப்  பண்பாடு மிகத்தேவை
மனிதம் வாழ்தல் பண்பாடென்றால்
      மண்ணில் அதுவே முதல்தேவை
---------------------------------------------------------------------------------------------------------------------------
இக்கவிதை , “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ இன் ஐந்து வகைகளில் வகை-4 புதுக்கவிதைப் போட்டிக்காகவே (முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை) எழுதப்பட்டது. இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன். 
                                                               நன்றி,                                                                -வி.கிரேஸ் பிரதிபா

17 கருத்துகள்:

  1. பண்பாடு மிக்கத் தங்களின் கவிதைக்கு வாழ்த்துகள் சகோதரி!
    நலமா?.நலமே விளைக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா.
      மிக்க நன்றி.

      நான் நலமே. நீங்கள் நலமா? உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி அண்ணா

      நீக்கு
  2. புதுக்கவிதை வெகுசிறப்பு.
    வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை வரிகள் தோழி. வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. பண்பாட்டுப் பெருமை கூறும் சிறந்த சிந்தனை!
    மிக அருமை!
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் கிரேஸ்!

    பதிலளிநீக்கு
  5. அருமை
    அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
  6. "மனிதம் வாழ்தல் பண்பாடென்றால்
    மண்ணில் அதுவே முதல்தேவை" என்றே
    நானும் உரைக்க விரும்புகின்றேன்!

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. கவி வரிகள் அனைத்தும் அருமை,
    வாழ்த்துக்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. சூப்பர் கிரேஸ் .. கலக்குங்க

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான கவிதை.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. சூப்பர் கவிதை! நல்ல சிந்தனை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...