இணையக்கல்வி - பகுதி 3

இந்த வரிசையில் முந்தையப் பதிவுகள், இணையக் கல்வி - பகுதி 1 
இணையக்கல்வி - பகுதி 2.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஆன்லைன் போர்டல் உண்டு என்று சொல்லியிருந்தேன். அதில் ஆசிரியர் வீட்டுப்பாடங்களை பதிவேற்றிவிட்டால் பிள்ளைகள் பார்த்து அங்கேயே பதில் அளித்துவிடலாம். சில நேரம் காகிதத்தில் எழுதிக் கொண்டுவாருங்கள் என்று சொல்லியிருப்பார்கள். சிலவற்றிற்கு கடைசி தேதி இருக்கும், சிலவற்றிற்கு இருக்காது. ஆனால் குழந்தைகளுக்கு ஆர்வம் பாருங்கள், அனேகமாக முதல் நாளிலேயே முடித்துவிடுவார்கள்.

இளையவனின் கிண்டர்கார்டன் வகுப்பின் சில படங்கள் இங்கே பதிவு செய்கிறேன். ஸ்பெல்லிங் பற்றி கவலைப் படமாட்டார்கள், கிண்டர்கார்டன் அளவிற்கு தெரிந்திருக்க வேண்டிய சில சொற்களைச் சரியாக எழுதினால் போதும். பிள்ளைகள் சுயமாகச் சிந்தித்து எழுத வேண்டும் என்பதே எதிர்பார்க்கப் படுகிறது.













15 கருத்துகள்:

  1. குழந்தைகளை சுயமாக சிந்திக்கவைக்கும் முறை அவர்களுக்கு நல்ல பயனைத் தரும்.

    பதிலளிநீக்கு
  2. படிக்கவே ஆசையா இருக்கும்மா...நம் நாட்டில் எப்போ வரும் இந்த முறை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா.
      உங்கள் ஆசிரிய வட்டங்களில் பகிருங்கள் கீதா. விரைவில் நம் கல்விமுறை சிறப்பாக மாறட்டும். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கீதா.

      நீக்கு
  3. இணைய கல்வி முறை சுயமாக சிந்திக்க வைக்கும் கல்வி முறை நம் நாட்டில் எப்போது வருமோ? பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் வரும் என்ற நம்பிக்கை தான் சகோ.
      நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  4. வணக்கம்
    சகோதரி

    இந்த முறை மலேசியாவிலும்..வியாபர முறையில் வந்து விட்டு விட்டது... பகிர்வுக்கு நன்றி...த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்,
      ஆமாம் சகோ, பெங்களூரிலும் (இன்னும் சில இடங்களிலும் கூட) வந்துவிட்டது சகோ...ஆனால் பணம்...!!?? :)
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  5. இணையக் கல்வியில் இணைந் தேன்.


    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. குந்தைகளை சுயமாய் சிந்திக்க விடுதலே உண்மை கல்வி
    அருமை
    நன்றி சகோதரியாரே
    தம+1

    பதிலளிநீக்கு
  7. ஸ்பெல்லிங் பற்றி கவலைப் படமாட்டார்கள், கிண்டர்கார்டன் அளவிற்கு தெரிந்திருக்க வேண்டிய சில சொற்களைச் சரியாக எழுதினால் போதும். பிள்ளைகள் சுயமாகச் சிந்தித்து எழுத வேண்டும் என்பதே எதிர்பார்க்கப் படுகிறது.//

    ஹும்! நம்ம நாட்டுல இதுதான் சுத்தமா இல்லையே! கேஜி குழந்தைகளுக்கு என்னவெல்லாம் கற்றுத் தருகின்றார்கள் அதுவும் எளிமையாக...இங்குள்ள குழந்தைகளை நினைத்து ஏக்கம் வந்தது....இது நம்மூரில் சாத்தியமா? சாத்தியம் ஆனால் ஆட்சியாளர்கள் இதை நடைமுறையில் கொண்டுவர மாட்டார்கள்....

    (கீதா: எனக்கு இந்த இடுகையை வாசித்ததும் நாங்கள் அமெரிக்காவில் க்யூப்பர்டினோவில், கென்னடி மிடில் ஸ்கூலில் என் மகன் படித்த நினைவு வந்தது....அருமையான கல்வி முறை இதோ நீங்கள் சொல்லி இருப்பது போலத்தான் 7 ஆம் வகுப்பிற்கு அந்த தரத்திற்கு...அப்போது இணையத்தில் சிலவே இப்போது போல் இல்லை என்றாலும் கற்பிக்கும் முறை இப்படியேதான்....சுயமாகச் சிந்தித்து எழுதுவதற்கு உதவும் விதத்தில்.....

    பெருமூச்சுதான் வருகின்றது சகோதரி நமது இங்குள்ள நிலையை நினைத்தால்....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...