மழை


உறங்கிக் கிடந்தவளைத் தட்டி எழுப்பினாய்
          உற்சாகம் பெருகவே                                    
சிறகு விரித்திடவே வானம் துலக்கினாய்    
          சிலிர்ப்பித்தாய் உயிர்க்கவே                    
திறந்த முகிலினின்று கொட்டும்  அழகினில்
          திகட்டாமல் மயக்கினாய்                  
பறந்த நினைவுகளில் பாடல் கருவென        
            பட்டென்று வந்திறங்கினாய்




38 கருத்துகள்:

  1. இந்த மாதிரி உணர்வு இங்க வரணும்னு பாத்தா மழையே வர மாட்டேங்குது.... :(

    பதிலளிநீக்கு
  2. திறந்த முகிலினின்று கொட்டும் ,,,,,,,,,
    அழகிய வார்த்தைகள்.
    சுவாசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கவிதை அருமை ..
    இன்னும் ஒரு நாள் இருக்கே...
    அதற்குள்ளே ஸ்டார்ட் மியுசிக் ...?
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா.
      ஹாஹா ஆமாம், ஆனால் படிப்பு, வீட்டுப்பாடம் எல்லாம் முடிந்தது. :)

      நீக்கு
  4. அன்புள்ள சகோதரி,

    பாடல் கருவென பட்டென்று பாடிய பாடல் அருமை.

    த.ம. 4.

    பதிலளிநீக்கு
  5. நலம் தானே தேன்?.அடிக் கடி காணாமல் போகிறீர்கள் ம்..ம்.ம் மழை பற்றிய விருத்தம் அருமைம்மா. ரசித்தேன். மேலும் தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே தோழி. ஆமாம், எதெதுவோ வந்து கொஞ்சம் வழிமாற்றம் செய்கிறது தோழி..இனி இடைவெளி வரக் கூடாதென நினைக்கிறேன்.
      பாராட்டும் கருத்துரைக்கு நன்றி தோழி

      நீக்கு
  6. அட்லாண்டா மழையில் நாங்களும் நனைஞ்சுடோம் டியர்:)

    பதிலளிநீக்கு
  7. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  8. கோடைக் காலத்திற்கேற்ற நல்ல மழை. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. சூப்பர் கிரேஸ்.. அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  10. மழையில் நனைந்து...மகிழ்ந்தேன்...சகோ அசத்தல்

    பதிலளிநீக்கு
  11. மழையை பற்றி யோசித்தால், முகிலினின்று கொட்டும் மழை போல எழுதிக் கொண்டே இருக்கலாம். அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
  12. நனைந்தேன்(கவிதை) மழையில்!

    பதிலளிநீக்கு
  13. தமிழ்நாட்டில் இப்போது கோடைமழை வெளுத்துக் கட்டியது. கவிதையின் ஈரத்தைப் பார்த்தால், இந்த மழைக்கு இங்கு அண்மையில் மதுரைக்கு வந்து நனைந்தாற் போல் இருக்கிறது.
    த.ம.9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
      மதுரை வரவில்லை, இங்கும் கோடை மழை தான் ஐயா

      நீக்கு
  14. என்னையும் நனைத்தது கவிமழை...

    பதிலளிநீக்கு
  15. ஆஹா... அழகுப்பா... அழகு பா... பட்டென்று வந்திறங்கினாய் என்றிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது கிரேஸ். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்துக் கருத்திட்டதற்கு மிக்க நன்றி தோழி.
      அட, ஆமாம் நீங்கள் சொல்வது நன்றாக உள்ளது.
      எப்பொழுதும் மழை கவிதை எழுத வைப்பதால் அப்படி எழுதிவிட்டேன். வந்திறங்கினாய் என்பது மற்ற வரிகளுக்குப் பொருந்துகிறது

      நீக்கு
  16. ஆஹா! என்ன அழகான ஒரு கவிதை...வாசிக்கும் போதே குளிர்விக்கின்றது....

    கேரளாவில் கோடை சீசன் மழை பெய்து குளிர்வித்துவிட்டது....

    தமிழ் நாட்டிலும்....ஆனால் சென்னையில் இல்லை சென்னைக்கும் கொஞ்சம் அனுப்பி விடுங்களேன்......

    பதிலளிநீக்கு
  17. கவிதையை படித்ததும்...

    " என் அறைக்குள் மழை ! "

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ.
      கண்டிப்பாகத் தங்கள் தளம் பார்க்கிறேன். பகிர்விற்கு நன்றி.

      நீக்கு
  18. மழை! அது சுகம் தரும் சுகந்தம்!
    நட்புடன்,
    புதுவை வேலு
    த ம +10

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோ.
    ஓராண்டு நிறைவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல ஆண்டுகள் சிறக்க வாழ்த்துக்கள்! தளம் பார்க்கிறேன், பகிர்விற்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  20. வானம் துலங்கதமிழ் கானம் நிறையு மனம்

    மோனம் கலைத்து வருக!

    தேனின் இனியமொழி தேக்கும் அமுதுவடித்

    தாக்கிப் படைத்துத் தருக!



    மேகம் அனுப்பமழைப் பிள்ளை புறப்படுக

    மின்னல் விரல்கள் அசைய!

    தாகம் கொண்டபுவித் தாயும் அரவணைக்கத்

    தங்கிப் பயிர்கள் வசிய!



    நீரின் மொட்டுதிர நிலத்தின் மலருமழை

    நின்று போன இங்கு!

    சீரில் சுவைநிறைத்துச் சொல்லும் இக்கவிதை

    வென்று போன தங்கு!

    கவிதை சொட்டும் கவிதை.

    அருமை சகோ.

    தொடருங்கள். வாழ்த்துகள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா அண்ணா..சிலிர்த்துவிட்டேன். மிக அருமை அண்ணா..விஜூ அண்ணாவாச்சே :)
      உங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மனம் நிறைந்த நன்றி. இப்பொழுதே இன்னும் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது..மிக்க நன்றி அண்ணா

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...