மூழ்கிய கப்பலால் சாளரம் துடைத்து



 பெரும் பெயல் பொழிந்த சனிக்கிழமை மாலை
ஆர்வமுடன் பலகணி மருங்கில் போகி 
சாரலோடு மகிழ்ந்து காகிதக் கப்பல் செய்து
நீரில் அவை மிதப்பதும் மூழ்குவதும் கண்டு
மூழ்கிய கப்பலால் சாளரம் துடைத்து நிற்க 
'இந்தாருங்கள் சாக்லேட்', அம்மா சொல்ல
'நற்சொல் கேட்டனம்' என்றே மகிழ்ந்தனர் புதல்வர்


 
"பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை" என்ற முல்லைப்பாட்டு வரியின்  (வரி எண்.6) இனிய தாக்கம் இக்கவிதைக்கு அடித்தளம் அமைத்தது.



சொற்பொருள்: பெயல்- மழை, மருங்கில் - அருகில், போகி - சென்று, கேட்டனம் - கேட்டோம்

32 கருத்துகள்:

  1. /// ஆர்வமுடன் பலகணி மருங்கில் போகி /// சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.தனபாலன்.

      நீக்கு
  2. வணக்கம்
    சகோதரி

    எழுதிய கவிதை நன்று சங்க இலக்கியப்பாடல் வரியையும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள் அரும் பத விளக்கங்களும் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சின்ன வயது நினைவை அள்ளிச்சென்றது.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே
      //அரும் பத விளக்கங்களும் நன்று// மிக்க நன்றி.
      ஆமாம், சிறுவயது நினைவு எனக்கும் வந்தது. நான் வாசலில் கப்பல் விட்டேன், என் பிள்ளைகள் பலகணியில் :)

      நீக்கு
  3. வணக்கம்

    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. நல்ல வரிகள்.
    நாம் செய்த காகிதக்கப்பல் நினைவிற்கு வந்தது.
    நன்றி கிரேஸ்.
    வேதா.இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  5. ஒருவரியுடன் தொடர்ந்த தங்கள்
    கற்பனை விரிவு அற்புதம்
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. சிறந்த கவிதை
    பொருள் விளக்கம் அருமை!

    பதிலளிநீக்கு
  7. சங்க இலக்கியம் தந்த கவியடி
    உங்கள் படைப்பில் ஒளிர்ந்து!

    என்னவென்று பாராட்ட உங்கள் திறமையை!
    என் அறிவு போதவில்லை இன்னும் சொல்ல...

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பா படைக்கும் உங்கள் திறமைக்குமுன் என்னுடையது சிறியதே தோழி..
      நன்றி

      நீக்கு
  8. இப்படி அனைவரும் இன்தமிழில் பேசிக் கொண்டால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்!..

    பதிலளிநீக்கு
  9. பழமையும் புதுமையும் கலந்த கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. மூலத்தை எடுத்துரைக்கும் நேர்மையும் கவிதை போலவே அழகு!!

    பதிலளிநீக்கு
  11. அருமையான வார்த்தைத் தேடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பிரியா

      நீக்கு
  12. நல்ல கவிதை... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் அக்கா...

    வீதியில் கப்பல் விட்ட நிலை போய் இப்போது பால்கனியில்...

    கத்திக் கப்பல், சாதாரணக் கப்பல், அடுக்குக் கப்பல் என பல வித கப்பல்களை செய்த நினைவுகள் கண்முன் தோன்றுகிறது...

    நன்று நன்று...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...