கவினுறு காலை

கா கா என்றே
காக்கையும் அழைக்க

கீக் கீக் என்றே
அணிலும் கூப்பிட

பக் பக் என்றே
மாடப்புறாவும் பேச

தலையை ஆட்டியே
தென்னையும் கேட்க

இவற்றினிடையே

விஷ் விஷ் என்றே
குக்கரின் சப்தமும்

விர் விர் என்றே
வண்டிகளின் சப்தமும்

கலந்து புலர்ந்ததே
கவினுறு காலை

37 கருத்துகள்:

  1. கலந்து புலர்ந்தது -
    கவினுறு காலை!
    கண்முன் விடிந்தது -
    விடியற் காலை!..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ரசித்தேன்.....
    வாழ்த்துக்கள்
    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  3. பெங்களூருல காலை இப்படித்தான் புலருதா....

    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  4. அவசர யுகத்தில் வாகன கூச்சலில் பறவைகள் கத்துவதை பட்டணத்தில் பார்க்க முடியாதுதான்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு நல்லா கேட்க முடியுது என்பதே மகிழ்ச்சி..
      நன்றி சுரேஷ்.

      நீக்கு
  5. எங்க வீட்டில்உம் குக்கர் சப்தம் தான் எல்லோருக்கும் அலாரம்.

    பதிலளிநீக்கு
  6. ஹே ! அத்தனை இயற்கை ஒளிகளோடு கலந்து
    குக்கர் கூட கவிபாடுதே !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மைதிலி, அவசரம் இல்லாத நேரத்தில் கவனித்துப் பாருங்களேன்..நன்றாய் இருக்கும்.. :)

      நீக்கு
  7. பதில்கள்
    1. ரசித்தமைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி திரு.தனபாலன்.

      நீக்கு
  8. சொல்லவே இல்லே .குக்கர் சத்தம் எங்கிருந்து ?நம் வீட்டில் இருந்தென்றால் 'நள'பாகச் சமையல்தானே?
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குக்கர் சத்தம் நம் வீட்டிலும் அக்கம்பக்க வீடுகளிலும்...சமையல் என்னுடையதுதான்.. :)

      நீக்கு
  9. இனிய கவிதை. மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. சூப்பர் கிரேஸ் .. உங்க ரசனையே ரசனை :)

    பதிலளிநீக்கு
  11. என் தமிழ் புதிர் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அனைத்தும் தேன் தேன் என மதுரமாய்த் தமிழில் அழைகின்றதோ.நன்று கிரேஸ்

    பதிலளிநீக்கு
  13. ஆக குக்கர் விசிலுக்கு ஒரு கவிதையா?
    காலைப் பொழுதில் பிரஷர் ஏறும் ... இங்கே...
    இனி குக்கர் விசில் சொல்லும் கவிதைகளை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையில் கேட்கும் அனைத்து ஒலிகளுக்கும் சேர்த்து மது..
      உங்கள் கருத்துரைக்கு நன்றி!

      நீக்கு
  14. கவினுறு காலையை ரசித்தேன் !
    வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  15. கலந்து ஒலிக்கும் காலை ஒலிகள் பற்றி கலக்கலான கவிதை!

    பதிலளிநீக்கு
  16. சிறந்த கவிதைக்கு என் பாராட்டுகள். சாதாரணமாக பறவை ஒலி, இயற்கை அழகை மட்டுமே வர்ணிக்கும் கவிஞரிடையே இயல்பான வாழ்வியலுடன் ஒட்டிய சேர்த்தீங்க பாருங்க அங்க நிக்குது உங்க “மரபும் இன்றைய புதுமையும் இணைந்த ரசனை” இப்படித்தான் இருக்க வேண்டும் இன்றைய கவிதை. பாராட்டுகள்மா. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய கருத்துகளுக்கும் ஊக்கத்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

      நீக்கு
  17. சேவல விட்டுட்டிங்களே!! ஆனால் புதுமையான அருமையான கவிதை! ரசித்துப் படித்தேன்... வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க வீட்டுப் பக்கத்துல சேவல் இல்லையே..என்ன என்ன கேட்கிறதோ, அதை மட்டும் எழுதிவிட்டேன்.
      உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜெயசீலன்.

      நீக்கு
  18. சிறந்த கவிதை.....

    சிறப்பான பல சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போது குக்கர் விசில் சத்தமும் கேட்டு கடமையை நினைவு படுத்தியது! போய் சமைக்கணும்! :)

    பதிலளிநீக்கு

  19. ரசித்தேன்.....
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...