கவிதை ... கணிதம்

நன்றி: கூகிள்

கவிதை
மெய்யோ பொய்யோ - சொல்லலாம்

கணிதம்
மெய்ப்பிக்க வேண்டும் - சொன்னதை

24 கருத்துகள்:

  1. இதுனால தான் நான் கணக்கை கண்டு காததூரம் ஓடுறேன்!
    சூப்பர் கிரேஸ் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா ...நானும் அதுக்குதான் முதலாவதைப் பிடித்துக் கொண்டேன்.. ;-)
      முதலாக வந்து கருத்துரைத்த தோழிக்கு நன்றி.

      நீக்கு
  2. கண்ணுக்கு மை அழகு, கவிதைக்குப் பொய் அழகு என்று திரைப்பாடல் எழுதிய வைரமுத்து, கவிதையில் “கவிதைக்கு நிஜமே கம்பீரம்” என்கிறார். என்ன சொல்ல?
    கணிதம் அப்பா போல கண்டிப்பானது, கவிதை அம்மா மாதிரி செல்லம் கொஞ்சும். வாழ்க்கையில் ரெண்டும்தானே வேண்டியிருக்கு சகோதரீ? செண்டிமெண்ட் இலலாமல் வாழ்க்கை இல்லை, செண்டிமெண்டே வாழ்க்கையும் இல்லையே? “இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” என்ற பாரதி என்ன கிறுக்கா? காதில் தேன்பாய்ந்தால் இனிக்குமா? எறும்புதான் கடிக்கும் என்பது கணிதம், இனிக்கும் என்கிறது கவிதை. தொனிப் பயன் கொண்டே புரிந்துகொள்ளவேண்டும். சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்...மெய்யும் பொய்யும் கலந்தே வாழ்க்கை. கவிதையில் பொய் இன்பம் தருகிறது, மெய் இறுமாப்பு தருகிறது என்று கொள்ளலாமோ? நானும் யோசிச்சுப் பாத்துருக்கேன், தேன் காதுல பாஞ்சா பிசுபிசுனு இருக்குமேன்னு :)
      தொனிப்பயன் தான் முக்கியம், அதைக் கொண்டே புரிந்துகொள்ளவேண்டும் என்பது சரியே ஐயா. உங்கள் வருகைக்கும் ஆழமான கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சிந்திக்க வேண்டிய விஷயம் வாழ்த்துக்கள் சகோ .
    த .ம .2

    பதிலளிநீக்கு
  4. கணக்கு பண்ணத்தெரிஞ்சா கவிதை தானா வருமே !
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே..சொற்களையும் எதுகை மோனையையும் கணக்குப் பண்ணுவதும் கவிதை. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  5. எப்படி கிரேஸ் இப்படி எல்லாம் :)
    அழகான கவிதைக்கு நயமும், கற்பனையும் வேணுமே அங்க தான் நமக்கு இடிக்குது.. கணிதத்தை பற்றி நான் பேசாமல் இருப்பதே மேல் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) அப்டினா உங்களுக்காகவே கணிதக் கேள்விகள் எழுதப்போகிறேன் ..

      நன்றி ஸ்ரீனி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஆணியடிக்கிற மாதிரி சொல்லிட்டீங்க..உண்மை எளிது தான்..மண்டையைக் குழப்பவேண்டியதில்லை.
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி திரு.தனபாலன்.

      நீக்கு
  7. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில்
    அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோ
    http://blogintamil.blogspot.com/2014/10/blog-post_30.html?showComment=1414640937421#c5411682433401538161
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. இந்த வார வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகம். கண்டு மகிழ்வீர்...

    http://blogintamil.blogspot.com/2014/10/blog-post_30.html

    நன்றி!!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...