புதிர்ப் பெண்ணே!

அன்று
ஆயிரம் துண்டுகளாய்
அடைபட்டுப் பெட்டியில்


இணைத்தேன்
இடையறா ஊக்கத்துடன்
இருபத்தொரு  நாட்களில்

இன்று
இனிய வசீகரத்துடன்
இனிதாய்ப் படச்சட்டத்தில்

பொழுதும்
பொலிவு சேர்க்கும்
புதிர்ப் பெண்ணே!

32 கருத்துகள்:

  1. OMG! ஆயிரம் பீசை கொண்டு ஒரு PUZZLE !
    அதை சேர்க்க 21 நாட்கள்!
    சான்சே இல்லை! ஒத்துக்கிறேன் கிரேஸ் பொறுமைசாலி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மைதிலி!
      ஏதோ இதுல பொறுமையா செஞ்சுட்டேன்..மத்தபடி அப்படி சொல்ல முடியாது :)

      நீக்கு
  2. கவிதை படத்துக்கும் பொருந்தியது
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. புதிர் எப்போதுமே பொலிவு சேர்க்கும் தானே. சிறப்பான கவிதை...

    பதிலளிநீக்கு
  4. அப்ப... வீட்ல வேல வெட்டியில்லாம சும்மாத்தான் இருக்கீங்க...?
    அட...சும்மாச் சொன்னேன்ங்க... உங்கள் பொறுமைக்கும், கைத்தொழில் நேர்த்திக்கும், மற்றும் கவிதை மனததிற்கும் என் வணக்கங்கள். மாடலே அழகாத்தான் இருக்கு அதை அடுக்கிப்பார்க்கும்போது இன்னும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா..கண்டுபிடிச்சுட்டீங்களே... :)
      உங்கள் மனமார்ந்த கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா!
      ஆமாம், நீங்கள் சொல்வது உண்மைதான்.

      நீக்கு
  5. மிக மிக நன்று.
    நானும் இப்படிச் செய்வதுண்டு.
    இனிய வாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  6. நீங்க பொறுமையின் சீகரமனு உணர்த்திய படம் .. சத்தியமா என்னால முடியாது :).. இந்த புதிர் பெண் இப்பொழுது எங்கள் வீட்டை அலங்கரிக்கின்றாள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) நன்றி ஸ்ரீனி!
      இப்பெண் உங்கள் வீட்டை அலங்கரிப்பது எனக்கு மகிழ்ச்சி! :)

      நீக்கு
  7. வாழ்த்துகள் கிரேஸ்! அழகான படம்! ஆயிரம் துண்டுகள் சேர்த்த அபூர்வசிகாமணி கிரேஸ்! :))

    பதிலளிநீக்கு
  8. தங்களின் பொறுமையைப் பாராட்டிக் கவி பாடிடத் தோன்றுகிறது !
    வாழ்த்துக்கள் கவிதைக்கும் அழகிய ஓவியத்தைத் தொகுத்தமைக்கும் .
    மென்மேலும் உங்கள் முயற்சிகள் வெல்லட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கு முதல் நன்றி! உங்கள் இனிய பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும் உளமார்ந்த நன்றி அம்பாளடியாள்!

      நீக்கு
  9. உருவாக்கிய சித்திரமும்..
    அதற்கான கவிதையும்..
    மனத்தைக் கொள்ளைகொண்டு போகிறது..
    மிகவும் அருமை சகோதரி...

    பதிலளிநீக்கு
  10. அடேங்கப்பா...!
    வாழ்த்துக்கள் சகோ..!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    கவிதையும் படமும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.
    த.ம 6வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. கொடுத்துள்ள முழுமையான படத்தைக் கொண்டு, சிறு சிறு துண்டுகளாக உள்ள படத்தினை இணைத்து முழுமையான படம் உருவாக்குவது நல்ல பொழுதுபோக்கு. முதல் முறை முயலும் போது சற்று கஷ்டமாக இருக்கும்.படம் பழகி விட்டால் விரைவில் சேர்த்து விடலாம்.

    இதை அழகான கவிதையாக சொல்லி விட்டீர்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் தோழி! ஒன்று செய்துவிட்டால் இன்னும் செய்யத் தூண்டிக்கொண்டேயிருக்கும்.
      உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி தோழி!

      நீக்கு
  13. கவிதையிலும் பொறுமையிலும் பொருந்திய எழில் போற்றுதற்குரியதே....!
    நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  14. அப்பப்பா... எத்தனை பொறுமை வேண்டும் இதைச் சேர்ப்பதற்கு.... 100-200 துண்டுகளாக இருப்பதைச் சேர்க்கவே பல சமயங்களில் சோம்பல் பட்டதுண்டு! :)

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு முறை சேர்க்கத் துவங்கிவிட்டால் முடிக்கும்வரை காத்திருக்கவே முடியாது :)
      உங்கள் மனமார்ந்த பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி வெங்கட்!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...