பயனற்ற ஆணவத்தால்

புரியாத பெற்றோர்
பரிதவிக்கும் புதல்வன்
பதிக்காகப் பொறுத்து பொறுத்து
புண்பட்ட  மனதுடன் மனைவி

யார் மாற்றுவார்
யார் சொல்லுவார்
சமுதாயமே நிறுத்து
சவடால் பேச்சை!

பெண்ணோ ஆணோ
வாழ விடு மனிதரை
பயனற்ற ஆணவத்தால்
வாழ்விற்கு இடரே!

27 கருத்துகள்:

  1. உண்மை... உணர வேண்டியவர்கள் உணர வேண்டுமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் எப்படி என்று தெரியவில்லை ஸ்ரீனி..நடந்தால் சமுதாயம் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  2. ஆணவம் தவிர்க்கப் பட வேண்டியது தான்...

    நல்ல கவிதை...

    பதிலளிநீக்கு
  3. ஈகோவை விட்டொழித்தால் எல்லோரும் நலமாய் இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  4. அழகான கவிதை. அனைவரும் உணர்ந்து நடக்க வேண்டிய அறிவுரை.வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  5. பயனற்ற ஆணவத்தால்
    வாழ்விற்கு இடரே!//உண்மை உண்மையே

    பதிலளிநீக்கு
  6. மேற்கத்திய நாடுகளில் இந்த நிலை அறிய படுவதில்லை 18 வயதில் ஒரு ஆணோ பெண்ணோ தன் வாழ்கையை (வேலை ,மற்றும் வாழ்கை துணை) இவற்றை தாங்களே தேர்ந்தெடுகின்றனர் இதில் பெற்றோர் குறுக்கீடும் இல்லை ஏனெனில் அவர்களும் இதே வழி முறையை பின்பற்றியவர்களே இது நம் நாட்டில் நடைமுறை படுத்துவது எளிதான ஒன்றல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி விமல்.
      நீங்கள் சொல்வது உண்மைதான், இங்கு அப்படி இருக்கவேண்டும் என்பதில்லை...ஒரு ஆரோக்கியமான சமநிலை இருந்தாலே போதுமானது.

      நீக்கு
  7. ஆணவம் என்றுமே அழிவைத்தான் தரும்! அருமையான கவிதை! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. பயனற்ற ஆணவம்..... சரியாச் சொன்னீங்க.....

    இது மட்டும் நமக்குப் புரிந்து விட்டால்...

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. கல்வி, சுய சிந்தனை, அதை மதிக்கும் மனப்பக்குவம் இவையே மருந்து இந்த நோய்க்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்..ஆனால் இவை இருந்தாலும் சிலர் இந்த விசயத்தில் கண்ணை மூடிக்கொள்கின்றனர்...
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மது.

      நீக்கு
  10. //பயனற்ற ஆணவத்தால்
    வாழ்விற்கு இடரே!//
    உண்மை!

    பதிலளிநீக்கு
  11. உறவுக்குள் ஆணவம்....!?ஒவ்வொன்றும் ஒருவிதம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா, வருத்தம் தான்..ஆனால் இருக்கிறதே சிலபேரிடம்...
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...