என்னை நானாகவே

மலரென்றும் நிலவென்றும்
மானென்றும் தேனென்றும்
மயக்கச் சொல்ல வேண்டாம்

கண்ணென்றும் விண்ணென்றும்
கவியென்றும் புவியென்றும்
கடமையாய்ச் சொல்ல வேண்டாம்

உயிரென்றும் உள்ளமென்றும்
உளறலாய் அல்லாமல் என்பெயரை
உரியவள் என்றுணர்ந்தேச் சொல்போதும்

என்னை ஏதோவாக உருவகிக்க வேண்டாம்
என்னை உவமையில்  புகழ வேண்டாம்
என்னை நானாகவே  விரும்பிடுவாய்

30 கருத்துகள்:

  1. வீண் புகழ்ச்சி வேண்டாமென்று சொல்றிங்க. நல்லது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தோழி, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
      தீபாவளி நன்றாகக் கொண்டாடிவிட்டீர்களா?

      நீக்கு
    2. கவிதைக்கு மட்டும்தான்
      பொய் அழகாயிருக்க முடியும்
      அருமையான கவிதை
      பகிர்வுக்கு ம் தொடரவும் வாழ்த்துக்கள்

      நீக்கு
  2. உங்களை அளாவுக்கதிமா புகழ்றாங்கன்னா! உங்களுக்கு குழி பறிக்குறாங்கன்னு அர்த்தம்

    பதிலளிநீக்கு
  3. வீண் புகழ்ச்சி வேண்டாமன்ற கவிதை...!

    சிறப்பான பதிவு!!! பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  4. ஓவர் செண்டிமெண்ட் உடம்புக்கு ஆகாதுன்னு சொல்றீங்க..உண்மைதான்..பலர் திருமணத்திற்கு முன்னர் மானே தேனே என்கிறார்கள்..திருமணத்திற்குப் பின்னர் பேனே ,பெருச்சாளியே என்கிறார்கள்..எப்பவும் ஒரே மாதிரி இருப்பதுதான் நல்லது..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. புகழாரம் வேண்டாம்
    கருத்தாரம் போதுமென
    விளம்பும் நல்ல கவிதை..

    பதிலளிநீக்கு
  7. உள்ளதை உள்ளபடி சொல்லு என்
    உள்ளம் கொண்டாயா உண்மையைச் சொல்லு
    அப்படின்னு கேட்கரீக..
    யாருங்க சொல்றாக...

    தீபாவளி வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் தாத்தா...
      நன்றி, உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்!

      நீக்கு
  8. அப்படி போடுங்க.. கலக்கல் கிரேஸ்
    அழகு :)

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரி..
    புகழ்ச்சி விரும்பாத தங்கள் எண்ணம் கண்டு வியப்பு, தங்களின் எண்ணம் போலவே உங்களவரின் செயல்கள் அமையட்டும்.. அழகான கவிதை சகோதரி. இது தான் பெண்ணியல் கவிதை என்பது.. பகிர்வுக்கு நன்றி. (தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்). நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே! உங்கள் மனமார்ந்த ஆழமான கருத்திற்கு மிகவும் நன்றி!
      உங்கள் வருகையே மகிழ்ச்சிதான் பாண்டியன், தாமதம் ஒரு பொருட்டல்ல :)

      நீக்கு
  10. அருமை கிரேஸ்..என்னை நானாகவே பிறர் விரும்புவதில் தானே மகிழ்ச்சி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. தன்னை உணர்ந்தவர்களால் மட்டுமே இப்படி கூற முடியும் .அருமை வாழ்த்துக்கள்
    தோழி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...