வானம் தாண்டியும்



கண் காணும் காட்சி
காப்பியமாகும்

காது கேட்கும் ஒலி
கானமாகும்

உள்ளம் உணரும்  உணர்வு
கவிதையாகும்

பார்ப்பதும் பார்க்காததும்
படைப்பாகும்

கட்டுப்பாடு ஏதுமில்லை
கவர்ந்த எதுவுமாகும்

பார் முழுவதும்
பாடு பொருளாகும்

வானம் தாண்டியும்
வரையில்லா எண்ணமாகும்

ஆழியின் ஆழத்தினும்
ஆக்கும் மனது ஆழமாகும்

இருப்பதிலும் இல்லாததிலும்
உரு அமைக்கும் கலையாகும்

பாரெங்கும் பரவும்
பல்வகை படைப்புக்களாகும்

புரிந்திடவும் ரசித்திடவும்
புவியோற்கு ரசமாகும்

படைத்திடும் அனைவருக்கும்
படைப்பாற்றல் அனைத்துமாகும்

20 கருத்துகள்:

  1. வணக்கம்
    கவிதையின் வரிகள் மனதை நெருடியது அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அருமை...

    // உள்ளம் உணரும் உணர்வு
    கவிதையாகும்.. //

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. ஆக்கும் மனதின் ஆழம் அதிகம்தான்.....

    பதிலளிநீக்கு
  4. படைத்திடும் அனைவருக்கும்
    படைப்பாற்றல் அனைத்துமாகும்//உண்மையே

    பதிலளிநீக்கு
  5. உங்கள் கற்பனை
    அழகிய கவியாகும் :)

    தினம் ஒரு அழகிய கவி தந்து அசத்துரிங்க கிரேஸ் .. என்றும் தொடரட்டும் :)

    பதிலளிநீக்கு
  6. படைப்பாளிக்கு எல்லாமே பாடு பொருள்.... நல்ல விஷயம்....

    சிறப்பான கவிதைக்குப் பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  7. யாதுமாகி நின்றாய் நீ கவிதையே !

    பதிலளிநீக்கு
  8. மிகச் சரி
    அதற்கு தங்களைப் போல்
    பார்வையில் தெளிவும் கொடுக்கும் திறனும்
    உள்ளவர்களுக்த் தான் சாத்தியம்
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையாக படைக்கும் நீங்கள் இப்படி என்னைப் பாராட்டியது உங்கள் பெருந்தன்மையே, மிக்க நன்றி! உளமார்ந்த மகிழ்ச்சியுடன் நன்றி ரமணி ஐயா!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...