இன்றும் வந்தான் அவன்

இன்றும் வந்தான் அவன்
என் உணர்வுகளைத் தட்டிச் செல்ல
என் மனக் கதவுகளைத் திறந்திட
என்னை ஒரு நிமிடமேனும் சிலையாக்கிட
என்னை, என்னை மறக்க வைத்திட
கொண்டல் மகனவன், மழை என்பவன்!
என்னை எப்பொழுதும் மகிழ்விப்பவன்
இன்றும் வந்தான் அவன்!

16 கருத்துகள்:

  1. தினம் வந்து மகிழ்விக்க வேண்டும்... (இங்கேயும் கொஞ்சம் அனுப்பி வையுங்கள்...)

    பதிலளிநீக்கு
  2. இனிமையானவன்... இதமானவன் ..வருகைக்கு நன்றி சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சசிகலா, நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
      உங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  3. வந்ததும் வனப்பினை வழங்கத்தான்!
    தந்ததும் இனிமையில் திளைக்கத்தான்!

    நன்றதே நுழைந்தேனே நானுமிங்கே
    நன்றியுடன் மகிழ்வையும் நவின்றேனே!...

    அருமையான கற்பனையும் கவியும் தோழி!
    வாழ்த்துக்கள்!

    மீண்டும் உங்கள் தளம் காண ஆவன செய்தமைக்கு
    என் நன்றியும் மகிழ்ச்சியும் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள்! வாருங்கள்!
      உங்கள் வருகை கண்டு என் தளம் துள்ளுகிறது. மீண்டும் வர இயன்றமைக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்திற்கும் நன்றி தோழி!

      நீக்கு
  4. அவ்வ்வ்வ்... துள்ளுகிறதா....
    அப்படியெனில் அது வேறு நோயாச்சே.... :).

    மிக்க மகிழ்ச்சி எனக்கும்!

    பதிலளிநீக்கு
  5. மழையைக் கொண்டல் மகனென வரித்த உவமை ரசித்தேன். உடலோடு இதமாய் மனம் நனைக்கும் மழைக்காதலனுக்காய் பாடிய பாடல் அருமை. பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்ததற்கும் அன்பாய் பாராட்டியதற்கும் நன்றி கீதமஞ்சரி!

      நீக்கு
  6. அழகு... நன்றி மழைக்கும் இப்படி ஓர் கவிதை கிடைக்க காரணமாக அமைந்ததிற்கு

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...