இயன்றவரிடம் இயன்றதைக் கேட்பதுவும்

திருமணத்திற்கு
இதைச் செய் அதை வாங்கு என்று
இல்லாதவரிடம் இல்லாததைக்  கேட்பது மட்டுமா
வரதட்சிணை?
இயன்றவரிடம் இயன்றதைக்  கேட்பதுவும்
வரதட்சிணையே!!

இருமன பந்தத்திற்கு ஒத்த மனமும்
இறுதிவரை காந்தமாக ஈர்க்கும் அன்பும்
இன்றியமையாதவை
இவை அல்லாமல் வேறெதுவும் அனாவசியமே
இதை உணர்ந்து கேட்பதை விடுத்திடுவோம்
இனிதாய் இணைந்து பண்பாய் வாழ்ந்திடுவோம்!!


16 கருத்துகள்:

  1. கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் நடக்கும் நாள் வெகு தொலைவில் மட்டுமே உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. ஒரு பக்கம் வரதட்சணை, அரேஞிட் மேரேஜ்னு ஒரே சாதிக்குள்ளே கல்யாணம் நடக்குது..

    இன்னொரு பக்கம் "லிபெரல்"னு சொல்லிக்கிட்டு எதையாவது செய்றாணுக அரைவேக்காடுகள்..

    யாரும் வாழ்க்கையை சரியாகப் புரிந்துகொண்டு வாழப்போவதில்லை..நல்ல வேளை உங்களுக்கு ஒரு ப்ளாக் இருக்கு, இப்படி எதையாவது கவிதை கட்டுரைகளிலாவது நம் ஆசையை நிராசையை எழுதி திருப்தி அடைந்து கொள்ளலாம்.


    பதிலளிநீக்கு
  3. மிகச் சரி
    இருக்கிறார்கள் கொடுக்கட்டும் என்பது கூட
    வரதட்சனைக் கொடுமைதான்
    கெட்டதில் சின்னக் கெட்டது பெரியக் கெட்டது
    என இருக்கா என்ன ?

    பதிலளிநீக்கு
  4. ரமணி அய்யா சொன்னது போல் கெட்டதில் என்ன வித்தியாசம் வாழப்போவது அந்தப் பெண்ணுடனுனான அன்பிலும் ,நேசத்திலும் என்பதை உணராதவரை இது தொடரத்தான் செய்யும்.... எண்ணம் அருமை கிரேஸ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் எழில்..ஆனால் படித்தவர் என்று சொல்லிக்கொள்ளும் பட்டம் பெற்றவர்கூட இதனைப் புரிந்துகொள்வதில்லை.
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி எழில்!

      நீக்கு
  5. கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாம் மாறவேண்டும். மாற்றத்தை நம்மிடமிருந்தே துவங்குவோம். வரும் தலைமுறையிலாவது இந்த வரதட்சிணை பேரங்கள் காணாமற்போகட்டும். சிறப்பான கரு. பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  6. ஆமாம் நாம் துவங்குவோம்.
    உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கீதமஞ்சரி!

    பதிலளிநீக்கு
  7. உண்மை தான்... ஆனா இந்த நிலைமை மாறுமா என்பது பெருத்த சந்தேகமே ... :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..அடுத்த தலைமுறையிலாவது மாறட்டும்....உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீனி

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...