நீ மட்டும் என்னுடனே இருப்பாயா?


கவலைகள் மிகும் போதில்
உன் தோளில் சாய்ந்திருக்கவே வேண்டும்
கேள்விகள் துளைத்திடும் வேளையில்
உன் இதயத்துடிப்பை மட்டுமே கேட்க வேண்டும்
பாரங்கள் அழுத்தும் நிமிடங்களில்
உன்னைப் பார்த்தே மற்றவை மறந்திட வேண்டும்
திசைகள் தெரியாத தருணங்களில்
துணையாக நீயிருக்க வேண்டும்
அலைகள் அலைக்கழிக்கும் பொழுதில்
அருகினில் நீயிருக்க வேண்டும்
இன்பங்கள் இனிக்கும் பொழுதிலும்
உன்னுடனே சிரித்திட வேண்டும்
இவையனைத்திற்கும் நீ என்னுடன் வேண்டும்
மற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன்
நீ மட்டும் என்னுடனே இருப்பாயா?

16 கருத்துகள்:

  1. இந்தக் கவிதைக்கு ஒருவர் மட்டும்தான் ஆம்/இல்லை/தெரியலை னு பதில் சொல்ல இயலும்!

    நான் வேணா இந்தப் பின்னூட்டத்தின் மூலம் அவரை நல்ல பதிலாகச் சொல்லச் சொல்லிக் வேண்டி கேட்டுக்கிறேன்! ஏதோ என்னால் இயன்றது இதுதான் கிரேஸ்! :-)

    பதிலளிநீக்கு
  2. ஆஹா.. அருமை கிரேஸ். உங்களவர் என்றும் எப்பொழுதும் உங்களுடனே இருப்பார் :)

    கவிதைக்கு பொருந்தும் படங்களை போட்டு கலக்குரீங்க :)

    பதிலளிநீக்கு
  3. அருமையான "வேண்டும்கள் "
    மிகவும் ரசித்தேன்
    தொடர (கவிதையையும் )வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. கூட இருந்தால் போதும்...! அருமை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.தனபாலன்

      நீக்கு
  5. அழகான கவிதை!!! மிகவும் ரசிக்கும் படி உள்ளது...

    அனைத்திற்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி வெற்றிவேல். வருகைக்கும் வாழ்த்துக்கும் மகிழ்ச்சிகலந்த நன்றி

      நீக்கு
  6. வேண்டும் வேண்டும் உங்கள் கவிகள்
    தூண்டும் எம்மை படிக்கும் ஆவல்
    தோண்டும் தீண்டும் தாகம் தீர்க்க
    நோண்டும் நுடங்கும் நெட்இலை என்றே!

    அழகிய கவி தோழி! வாழ்த்துக்கள்!
    எனக்குத்தான் வர நெட் கோளாறிப் போனது..:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கவி அருமை தோழி, நெட் இல்லை என்பதை அழகாகச் சொன்னீர்கள். பரவாயில்லை தோழி, நெட் இல்லையென்றாலும் வந்தவுடன் என் தளம் வந்து கருத்து இட்டதற்கு மகிழ்ந்தேன்..மிக்க நன்றி தோழி!

      நீக்கு
  7. ஆகமொத்தம் எப்போதும் நீ வேண்டும்.சரிதானே ? வாழ்க நலமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா, சரிதான். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. காதல் உணர்வு ததும்ப வார்த்தைகளில்
    வலுப்பெற்று நிக்கும் அழகிய காதல் கவிதை இது அருமை !
    வாழ்த்துக்கள் சகோ .வலைச்சரத்திலும் இன்று உங்களை
    அறிமுகம் செய்யவுள்ளேன் .முயற்சிகள் தொடரட்டும்
    வெற்றியும் உமதாகும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கு மிகவும் நன்றி அம்பாள் அடியாள் அவர்களே! உங்கள் பாராட்டும் கருத்துரையுமே மகிழ்ச்சி தருவதாக உள்ளது..இரட்டிப்பு மகிழ்ச்சியாக வலைச்சர அறிமுகம்..உங்களுக்கு நன்றி பல!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...