என் அன்புத் தந்தாய்!

தந்தாய்! என்னுயிர் தந்தாய்!
உயிர் தந்தாய்
ஊக்கம் தந்தாய்
கல்வி தந்தாய்

என் அன்புத் தந்தாய்!
அன்பு தந்தாய்
அரவணைப்புத்  தந்தாய்
வளமான வாழ்வு தந்தாய்

என் தந்தாய்
நீ
எல்லாம் தந்தாய்
எதுவும் எதிர்பாராமல்

என்னைச் செதுக்கிய சிற்பியே
நீ இல்லாமல் நான் வெறும் கல்லே
என்னை உருவாக்கிய குயவனே
நீ இல்லாமல் நான் வெறும் மண்ணே

தந்தையர் தினமாம் இன்று
என்றென்றும் நீ தந்த அன்பல்லவா?
என்றென்றும் நீ தந்த வாழ்வல்லவா?
ஒரே நாளில் எப்படிச் சொல்ல?

என் தந்தாய்
நான் எதைத் தருவேன்
சூரியனுக்கு ஒரு சுடர் தருவதா
கடலுக்கு ஒரு துளி தருவதா

இருந்தாலும் தருகிறேன்
என் அன்பை
தெரிந்தாலும் தருகிறேன்
என் நன்றியை
அறிந்தாலும் தருகிறேன்
தந்தையர் தின வாழ்த்தை!





25 கருத்துகள்:

  1. //என் தந்தாய்
    நான் எதைத் தருவேன்
    சூரியனுக்கு ஒரு சுடர் தருவதா
    கடலுக்கு ஒரு துளி தருவதா//

    என்ன ஒரு வரிகள் கிரேஸ். மிகவும் அருமை. இதை விட சிறப்பாக அப்பாவிற்கு ஒரு வாழ்த்துப்பா எழுத முடியாது. சூப்பர்!! சூப்பர்.!!

    அப்பாவிற்கு என்னுடைய இனிய தந்தையர் தின வாழ்த்துக்ககளையும் சொல்லிடுங்க :)

    பதிலளிநீக்கு
  2. சிறப்புக் கவிதை அருமை...

    தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு.தனபாலன்!
      உங்களுக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துகள்!

      நீக்கு
  3. எந்தாய் தந்தாய் என்றாய் இனிதாய்
    தந்தாய் தமிழ்பாவால் சிந்தினாய் சிறப்பித்தாய்
    உன்தாய் செய்மாதவத்தால் உவந்தாய் உன்னன்பை
    நன்றாய் இருப்பாய் நவின்றேன் வாழ்த்துனக்கே!

    அழகிய பாமாலை! ரசித்தேன் தோழி!

    அனைத்துத் தந்தையருக்கும் அன்பு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நன்றாய் இருப்பாய் நவின்றேன் வாழ்த்துனக்கே!// மகிழ்ச்சியடைந்தேன், வாழ்த்து கண்டே! மிக்க நன்றி இளமதி!
      வருகைக்கும் இனிய கவிதைக்கும் நன்றி பல தோழி!

      நீக்கு
  4. தந்தாய் தந்தாய் என்று தந்தையை உயர்த்திய பகிர்வுகள்..

    இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜேஸ்வரி அவர்களே. தந்தையர் தின வாழ்த்துகள்!

      நீக்கு
  5. சிறப்புக் கவிதை வெகு சிறப்பு
    தந்தை என்கிறச் சொல்லைச் சொல்லச்
    சொல்லத்தான் மனம் எத்தனை
    பெருமிதம் கொள்கிறது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி ஐயா! உங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!

      நீக்கு
  6. கவிதை அருமை தோழி !!!
    தங்களுக்கு எனது இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் தோழி !!!




    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான கவிதை கிரேஸ்.. வாழ்த்துகள் தோழி..

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. நன்றி திரு.ஜெயக்குமார். உங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்

      நீக்கு


  9. தந்தாய் தந்தாய் எல்லாம்
    தரணியின் அன்பை எல்லாம் எனக்குத்
    திரட்டித் தந்தாய்.

    தந்தாய் அத்தனையும் எனினும்
    எந்தாய்க்கு நீ தந்த ஒரு அன்பளிப்பை
    என்னவென நான் சொல்வேன் !!

    எந்தாய்க்கு பரிசாக என்னையே
    என்று நீ அளித்தாயோ
    அன்று முதல் இன்று வரை
    என் தந்தை என சொல்லிச்சொல்லி
    பூக்க வைத்தாய். எனை உன்
    புகழ் பாட வைத்தாய்.

    என்னையே எனக்குத் தந்த
    தந்தையே !! உன்னிடம் இனி
    தா எனக் கேட்பதற்கும் என்ன உளது ?

    சுப்பு தாத்தா
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இன்னும் கேட்க என்ன இருக்கிறது..வருகைக்கும் அருமையான கவிக்கும் நன்றி சுப்பு தாத்தா!
      உங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!

      நீக்கு
  10. என் அன்புத் தந்தாய்!
    அன்பு தந்தாய்
    அரவணைப்புத்  தந்தாய்
    வளமான வாழ்வு தந்தாய் //

    வாவ்வ்வ்வ்வ்! அசத்தலான கவிதை சகோ! சந்தங்களனைத்தும் அருமை!!

    பதிலளிநீக்கு
  11. ''..என் தந்தாய்
    நீ
    எல்லாம் தந்தாய்
    எதுவும் எதிர்பாராமல்.
    சூரியனுக்கு ஒரு சுடர் தருவதா
    கடலுக்கு ஒரு துளி தருவதா...''
    Great!. samme here.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  12. உணர்ந்து எழுதிய வரிகள். அட்டகாசம் போங்க. தந்தை கொடுத்து வைத்தவர் தான். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. அன்பின் கிரேஸ் - அருமையான தந்தையர் தின வாழ்த்துப் பா - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...