அவரு மட்டும் எப்படிங்க தப்பிக்கலாம்?

அதிகாலை எழுந்து
பள்ளிக்குத் தயார் செய்து
கொண்டுபோய் விட்டு
பின்னர் கூட்டிக்கொண்டு வந்து
இடையில் வீட்டைச் சுத்தம் செய்வது
காய்கறி வாங்குவது என்று பல திசை ஓடி
அரைகுறையாகச் சமைப்பது 
ஆமாங்க, உண்மைய ஒத்துக்கணும் தானே
மாலையில் வீட்டுப்பாடம் விளையாட்டு
என்று ஒரு ஓட்டம் ஓடி
அப்பா! அடுத்த வாரத்தில் இருந்து விடுமுறை
என்று மகிழ்ந்து பல திட்டம் போட்டு
...
வந்தது விடுமுறை
நாட்டாமைப் பதவியுடன் இம்முறை
யாருக்கா? எனக்குதாங்க
போட்ட திட்டமெல்லாம்
பட்டமாய்ப் பறக்குது
சிறியவனுக்கு  ஒரு வயது கூடியதோ
பெரியவனுடன் போட்டியும் கூடியதே
அரை மணிக்கொரு.. இல்லை இல்லை
சில நேரம் நிமிடத்திற்கு ஒன்று
அதுதாங்க..பஞ்சாயத்து!

அந்த பஞ்சாயத்தை ஒருவாறு சமாளிக்கிறேன்
ஆனால்
என் பஞ்சாயத்தைக் கேளுங்க (சும்மா விளையாட்டுக்குங்க )
அவரு மட்டும் பணி என்ற கேடயத்துடன்
எப்படிங்க தப்பிக்கலாம்?
அவரு யாரா? அதாங்க என் மணவாளரு! :)

சரி, போறேங்க..
போட்ட சாப்பாட்ட
போதும் போதும்னு
ஒவ்வொரு வாய்க்கும் சொன்னா...
என்னதாங்க பண்றது?
போய்ப் பாக்குறேன்!

விடுமுறை நிறைய எழுத வைக்குதோ? இப்போதாங்க நினைவு வந்தது..தாய்மையின் குழப்பம் பதிவு.

20 கருத்துகள்:

  1. கிரேஸ், பஞ்சாயத்துத் தவிர்த்து அனைத்தும் எங்க வீட்ல நடப்பது தான்.. அவரு வந்தவுடன், நீ வெளியே போயிடு. அப்புறம் பாரு.. :-))

    பதிலளிநீக்கு
  2. @தியானா: ஹாஹா..பரவாயில்லை..காமெடி பஞ்சாயத்து தான்..நீ சொல்வதும் நல்ல ஆலோசனைதான் தோழி :)

    பதிலளிநீக்கு
  3. அட..அட...நாயக்கர் வீட்டுலையே பஞ்சாயத்தா? :)...

    பதிலளிநீக்கு
  4. சொல்ல நினைப்பதை சுவை குன்றாமல்
    மிக மிக அழகாகச் சொல்லிப்போகிறீர்கள்
    மிகவும் ரசித்துப்படித்தேன்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி ஐயா! உங்கள் கருத்துரை மகிழ்வும் ஊக்கமும் தருகிறது.

      நீக்கு
  5. குழந்தைகளின் இயல்பான குறும்பை ரசிக்கும் காலத்தில் ரசித்திடவேண்டும். பின்னாளில் பெரியவர்களானபிறகு நம் தேவை தேவையில்லாத காலத்தில் நாம் அழைத்தாலும் ஏனென்று கேட்க அத்தனை பிகு செய்வார்கள். மேற்படிப்பு, தேர்வு, நண்பர்கள், விளையாட்டு,முகப்புத்தகம் போன்றவற்றுள் புகுந்தபிறகு நம் இருப்பும் கூ மறக்கப்பட்டுவிடும் பெரும்பாலும். ஆதலால் இந்த ஆனந்தத்தொல்லையை அனுபவித்தே மகிழ்வோம்... பின்னாளில் அசைபோடவேனும் உதவும். பஞ்சாயத்துக்கு நடுவிலும் அழகான கவிதை உதயம். பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  6. இதை நான் படிக்கும்போது பஞ்சாயத்துகள் முடிந்து வெறுமை குடியேறியிருக்கும்... அதான் பள்ளிகள் திறந்தாச்சே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு விடுமுறை இப்பொழுதான் துவங்கியுள்ளது எழில். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. அப்ப அங்கேயுமா? :)
      வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி திரு.தனபாலன்.

      நீக்கு
  8. அட, கிரேஸ் வீட்டுல பஞ்சாயத்தா? எங்கே நாட்டாமை? :) எங்கே ஆலமரம்? :) எங்கே அந்த சொம்பு? :)

    நாட்ட்ட்ட்டாமை! தீர்ப்பை மாத்து :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா நன்றாக சிரிக்கவைத்துவிட்டீர்கள்! :)
      வருகைக்கு நன்றி மனீ அவர்களே!

      நீக்கு
  9. ****சிறியவனுக்கு ஒரு வயது கூடியதோ
    பெரியவனுடன் போட்டியும் கூடியதே
    அரை மணிக்கொரு.. இல்லை இல்லை
    சில நேரம் நிமிடத்திற்கு ஒன்று
    அதுதாங்க..பஞ்சாயத்து!

    அந்த பஞ்சாயத்தை ஒருவாறு சமாளிக்கிறேன்
    ஆனால்
    என் பஞ்சாயத்தைக் கேளுங்க (சும்மா விளையாட்டுக்குங்க )
    அவரு மட்டும் பணி என்ற கேடயத்துடன்
    எப்படிங்க தப்பிக்கலாம்?
    அவரு யாரா? அதாங்க என் மணவாளரு! :)****

    He escapes because he lacks the "பஞ்சாயத்து skills"! He knows that you are "skillful". But he is not going to admit that. He anticipates that you should know that he is skill-less in this "subject"!

    Who are they?

    Why are they like this?

    They are MEN! lol

    "God" designed them and created them! Let us analyze carefully one more time. I am ESCAPING from here now! I am gone!

    பதிலளிநீக்கு
  10. சுவரின்றி சித்திரமா? அவரின்றி வாழ்க்கையா? வாழ்த்துங்கள் போற்றுங்கள் அப்பாவைப்போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா..கண்டிப்பாக. அதில் ஒன்றுதான் ...
      http://thaenmaduratamil.blogspot.com/2013/02/pondraa-kaadhal.html
      நன்றி!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...