பெரும் பெயல் பின்னால்..

ஆழியிலிருந்து முகந்த நீரை சுமந்து
தொலை தூரம் பயணித்த முகில் திரள்
களைத்து கருத்ததால் சுமையிறக்க நினைந்து
ஒழிவின்றிப் பொழிந்த பெரும் பெயல்!

மணாளனின் ஒளிக்கரம் தழுவக் காத்திருந்து
சளைத்துக் கவிழ்ந்த சூரியகாந்தி இதழ்
களிப்பில் மலருமாறு மேகத்திரைப் பின்னிருந்து
ஒளி முகம் வெளிக்காட்டுகிறான் பகலவன்!

4 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...