வண்ண பட்டாம்பூச்சி

வண்ண பட்டாம்பூச்சி! வண்ண பட்டாம்பூச்சி!
நறுமணம் வீசும் மலரில் சிலையென நீ அமர்ந்திருந்தாயே
அந்த அழகைக் கண்டே மெய்மறந்தேன், நானே சிலையானேன்
சிட்டுக் குருவி தத்தி வந்தால் நான் என்ன செய்வேன்?
நொடியில் சிறகடித்துப் பறந்துச் சென்றாயே!
சிலையென இவள் என்ன செய்கிறாள் என்றே
குருவியும் தலையை ஆட்டி ஆட்டிப் பார்க்கிறது
வண்ணச் சிறகை விரித்தே நீ மீண்டும் அருகில் வா!

5 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...