இறைவனே போற்றி !

நீக்கமற நிறைந்திருக்கும் நிறைவே
அனைத்தும் உருவாக்கிய அனைத்துமானவனே
நிகழ்ந்தது நிகழ்வது நிகழப்போவது
எல்லாம் அறிந்த இறைவனே
உம்மை வாழ்த்தி வணங்கி போற்றி
இப்பாடல் தருகின்றேன், நீ எனக்கு
இன்னும்பல பாடல் தா
அதில் சில பாடல் உமக்கே தருகின்றேன்!

தமிழ்மீதும் குறிப்பாக சங்கத்தமிழ் மீதும் கொண்ட காதலால் தமிழுக்கென்று ஒரு தனி வலைப்பூ எழுத நினைத்தேன். அதனால் 'தேன்மதுரத்தமிழ்' என்ற இந்த வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன். சங்கப்புலவர்களின் வழியில் இந்த வலைப்பூவில் முதலாக பதிவு செய்ய கடவுள் வாழ்த்து எழுத வேண்டும் என்ற அவாவில் உருவான கவிதை இது.
வேறு இடங்களில் வைத்திருக்கும் என் தமிழ் பதிவுகளையும் இங்கே இடமாற்றம் செய்ய எண்ணியுள்ளேன்.


4 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...